Friday, April 29, 2022

என் மனம் இருந்தது

 


வெற்று காகிதமாய்

என் மனம் இருந்தது 

உன் பெயரை 

அதில் எழுதும் வரை !


தனித்த முற்றமாய் 

என் மனம் இருந்தது 

துளசிச் செடியாய் 

நீ அங்கு தளிர்க்கும் வரை !


ரசமில்லா கண்ணாடியாய் 

என் மனம் இருந்தது 

உன் அழகு 

அதில் விழும் வரை 


வெற்று மேடையாய் 

என் மனம் இருந்தது 

நடன தேவதையாய் 

நீ கால் பதிக்கும் வரை !


பனித்துளியாய் 

என் மனம் இருந்தது 

குளிர் சூரியனாய் 

நீ உதிக்கும் வரை 


ஈர விறகாய் 

என் மனம் இருந்தது 

காதல் தீயாய் 

நீ பற்றி கொள்ளும் வரை 


என்னிடமே 

என் மனம் இருந்தது 

கண் பார்வையால் 

நீ கட்டி இழுக்கும் வரை 


No comments:

Post a Comment