உன்னை
பார்த்துக்கொண்டிருப்பதால்
நேரம் போதவில்லை ...
கடிகாரத்துக்கும் !
எண்ணங்களை கொட்டினாலும்
வரைய முடியவில்லை என்னாலே ...
வண்ணங்களை கொட்டியே
ஓவியம் வரைகிறாய்
தரையிலே !
இலக்கணமும் இல்லை
கருத்துக்களும் இல்லை
எனில்
உன் மழலைக்கு ஈடாக
அந்த ஈசன் மொழியும் இல்லை !
========================
என்னென்னமோ பெயர் சொல்லி
எப்படி எப்படியோ
கொஞ்சுகிறாய்
புரியாத கதைகளை
முகம் பார்த்து
புலம்பி தீர்க்கிறாய்
இல்லாத ராகத்தில்
தாலாட்டு பல பாடி
தூங்க வைக்கிறாய்
பசி இல்லாத எனக்கு
ஊட்டி விட்டு உண்ண சொல்லி
அடம் பிடிக்கிறாய்
ஆடை கட்டி பூச்சூடி
இஷ்டம் போல் அலங்கரித்து
அழகு பார்க்கிறாய்
ஊஞ்சலில் அமர வைத்து
முன்னும் பின்னும்
ஆட்டுகிறாய்
ஒரு முறை உயிர் கொடு
ஒரே ஒரு முத்தம்
கொடுக்கிறேன் என
இறைவனிடம் கெஞ்ச வைக்கிறாய்
No comments:
Post a Comment