Thursday, April 21, 2022

கவிதை மேகங்கள்

பாதையெங்கும் அவள் நினைவு 

நெருஞ்சியாய் குத்துதே !

இரும்பரிக்கும் துரும்பு போல 

நெஞ்சரிக்குது காதலே !

கனவில் வரும் பாடலெல்லாம் 

கண்விழிச்சா வாடுதே !

ஏமாத்தும் மேகங்களால் 

பூநாத்து கருகுதே !


=======================


வாடிப்போனதென்னவோ நான் ...

அவள் மலராம் !


சிறகொடித்து போன 

தென்றல் 


நீ தவிர்ப்பதும் 

நான் தவிப்பதும் 


இனிப்பதே இல்லை 

நீ இல்லாமல் ...


நூலறுந்த பட்டமொன்று  

காற்றில் அலைவது போல 

நீயின்றி அலையுது காதலே !


இரும்பரிக்கும் துரும்பு போல 

நெஞ்சரிக்குது காதலே !


கண்ணீர் தினம் அரித்தும் கரையவில்லை 

விழியில் உன் பிம்பமே  


அமைதியான காட்டுக்குள்ளே 

ஆர்ப்பரிக்கும்'அருவிபோல 


நிலத்தடி நீர் உறிஞ்சும் 

கருவேலம் மரத்த போல 


வரப்போரம் 

நீ நடந்தா 

நெற்பயிரும் 

தலை நிமிருமடி !


=====


அடிக்கடி 

மேக போர்வையை 

போர்த்திக்கொண்டு 

கண்ணாமூச்சி காட்டுகிறது 

நிலவு !


கடந்து போனது 

ஒரு மேகம்  ...

காதல் மழையை 

பொழிந்து விட்டு !


காதல் கொண்ட 

இரு மேகங்கள் 

ஆசையோடு உரசியதில் 

பற்றி கொண்டது 

மோக மின்னல் !


நீ 

என் தேடலின் முடிவா ?

தவிப்பின் தொடக்கமா ?


உனக்காக 

கவிதை எழுதுகிறேன் 

என்று யார் சொன்னது ...

உன்னால் 

எழுதுகிறேன் !


கடவுளும் 

நீயும் 

ஒன்றுதான் ...

காட்சி தாராமலே 

காத்திருக்க 

வைப்பதால் !

=====================

No comments:

Post a Comment