பாதையெங்கும் அவள் நினைவு
நெருஞ்சியாய் குத்துதே !
இரும்பரிக்கும் துரும்பு போல
நெஞ்சரிக்குது காதலே !
கனவில் வரும் பாடலெல்லாம்
கண்விழிச்சா வாடுதே !
ஏமாத்தும் மேகங்களால்
பூநாத்து கருகுதே !
=======================
வாடிப்போனதென்னவோ நான் ...
அவள் மலராம் !
சிறகொடித்து போன
தென்றல்
நீ தவிர்ப்பதும்
நான் தவிப்பதும்
இனிப்பதே இல்லை
நீ இல்லாமல் ...
நூலறுந்த பட்டமொன்று
காற்றில் அலைவது போல
நீயின்றி அலையுது காதலே !
இரும்பரிக்கும் துரும்பு போல
நெஞ்சரிக்குது காதலே !
கண்ணீர் தினம் அரித்தும் கரையவில்லை
விழியில் உன் பிம்பமே
அமைதியான காட்டுக்குள்ளே
ஆர்ப்பரிக்கும்'அருவிபோல
நிலத்தடி நீர் உறிஞ்சும்
கருவேலம் மரத்த போல
வரப்போரம்
நீ நடந்தா
நெற்பயிரும்
தலை நிமிருமடி !
=====
அடிக்கடி
மேக போர்வையை
போர்த்திக்கொண்டு
கண்ணாமூச்சி காட்டுகிறது
நிலவு !
கடந்து போனது
ஒரு மேகம் ...
காதல் மழையை
பொழிந்து விட்டு !
காதல் கொண்ட
இரு மேகங்கள்
ஆசையோடு உரசியதில்
பற்றி கொண்டது
மோக மின்னல் !
நீ
என் தேடலின் முடிவா ?
தவிப்பின் தொடக்கமா ?
உனக்காக
கவிதை எழுதுகிறேன்
என்று யார் சொன்னது ...
உன்னால்
எழுதுகிறேன் !
கடவுளும்
நீயும்
ஒன்றுதான் ...
காட்சி தாராமலே
காத்திருக்க
வைப்பதால் !
=====================
No comments:
Post a Comment