கருவிழி தூரிகையால்
மோக வண்ணங்களை
தீட்டுகிறாய் நெஞ்சில் ...
உறவுக்கு வண்ணம் பூசி
வருவாயோ வாழ்வில் !
காணும் யாவும்
உன் வண்ணங்களை காட்டி
பற்ற வைக்கிறது
உன் நினைவு தீயை ...
அதன்
சாம்பலிலாவது
கரையுமோ உன் எண்ணங்கள !
வண்ணங்களால்
நிறைந்த உன் காதல்
கருப்பு வெள்ளை விழியில்
வழிய வைத்தது
நிறமற்ற நீரை !
கொஞ்சிய வண்ணம்
நீ சொன்ன வார்த்தைகளில்
சாயம் போய் விட்டது ...
இன்னமும் வண்ணங்களை
காட்டி மாயம் செய்கிறது
உன் எண்ணங்கள் !
என்
கருப்பு இரவுகள்
ஒவ்வொன்றும்
வானவில் இரவுகளாகவே
கழிகின்றன
வண்ண மயமான
உன் கனவுகளால் !
நினைத்தபோது
வண்ணங்களை
மாற்றிக்கொள்ளுகிறாய்
உன் எண்ணங்களில் ....
உன் வண்ணங்களை தவிர
வேறெதையும் அறியாது
தவிக்கிறது
என் எண்ணங்கள் !
உன் எண்ணங்கள்
ஒவ்வொன்றும்
நெஞ்சில்
பூக்க வைக்கிறது
பூக்களை
பல வண்ணங்களில் ...
பூச்சூட வருவாயோ ...
வேர்களில்
வெந்நீர் ஊற்றி போவாயோ !
கருமையே அழகு ...
உன்
கருவண்ண கூந்தலில்
இடம் கிடைத்ததால்
வண்ண பூக்களும் !
பொய் வண்ணம்
பூசி வந்த
உன் காதலுக்கு முன்னால்
தோற்றுப்போனது
நிற பேதமற்ற
என் காதல் !
ஓவியம் ஒன்று
காதல் ஓவியத்தை
தீட்டியது நெஞ்சில் ...
தீட்டி முடிந்ததும்
கலைந்து போனது
வார்த்தை புயல்
ஒன்றில் !
உன் அழகு வண்ணங்களை
வெண்மை கொண்ட காகிதத்தில்
வடிக்க முனைகிறது
கரு மை கொண்ட
பேனா !
No comments:
Post a Comment