உன் கண் பார்த்து
நின்ற நேரத்தை
நீ மண் பார்த்து
நின்ற கோலத்தை
தடம் பார்த்து
தொடர்ந்த இடங்களை
இடம் பார்த்து
சூடிய மலர்களை
உடன் சேர்ந்து
கழித்த பொழுதை
கடன் வாங்கி
களித்த முத்தத்தை
நினைவு நீரலைகளை
உறிஞ்சிய மேகத்தை
கனவு பூமியில்
பொழிந்த மோகத்தை
கை கோர்த்து
நடந்த இடங்களை
மெய் கோர்த்து
பதித்த தடங்களை
சிறகாய் வந்த
மின்னலை
சிறகொடித்து போன
தென்றலை
மழையில் குடையாய்
வந்தவளை
வெயிலில் நிழலாய்
நின்றவளை
கனவை பரிசாய்
தந்தவளை
நினைவை களவாடி
போனவளை
காட்சி பிழையாய்
ஆனவளை
காதல் பிழையாய்
போனவளை
பன்னீர் துளியை
நெஞ்சில் ஊற்றி
களித்தவளை
கண்ணீர் துளியை
முற்று புள்ளியாய்
வைத்தவளை
No comments:
Post a Comment