மேகமெல்லாம் கூடுதடி!
தெக்கால வயலோரம்
தவக்களையும் கத்துதடி!
சேத்துவயல் காத்தடிச்சு
அலைஅலையா பெரளுதடி!
நாத்துவயல் ஆட்டத்துல
ஒந்நெனப்பு தெரளுதடி !
கறுக்கருவா கண்ணால
காளமனச வெட்டிபுட்ட!
கறுத்தகாள கனவுலதான்
கரும்பு சாற கொட்டிபுட்ட !
பவளமணி பாசி வாங்கி
பசுங்கழுத்தில் கட்டிடவா!
எளநீர் காதலத்தான்
பதநீரா ஊட்டிடவா!
No comments:
Post a Comment