Monday, May 10, 2021

போகாதே

வேசம் கட்ட தெரியாமே
பாசம் கட்டி வச்சேனே
நேசம் காட்டி வந்தாளே
மோசம் காட்டி போனாளே!

ஊர் பாக்க மணமுடிக்க 
தேர் கொண்டு வந்தேனே
யார் இவன் என்றாளே
வேர் இழந்து சரிந்தேனே!

காலம் போன பின்னாலே
காலன் வந்து நிப்பானே
காதல் நியாயம் கேப்பானே
காத்திருப்பாய் செந்தேனே!


No comments:

Post a Comment