Monday, May 31, 2021

தீ

அணைத்தால் 
தீ அணைந்திடும் என்றார்கள்...
நீ அணைத்தபோதுதான்
என்னுள் எரியவே
தொடங்கியது!

மயிலும் பாக்க காகமாச்சு
குயிலின் குரல் நாராசமாச்சு
ரோசாவும் அரளியாச்சு
தாமரையும் சருகாச்சு
அன்னமும் நொண்டியாச்சு
தேரும் கட்ட வண்டியாச்சு
பொன்னும் தகரமாச்சு
நிலவும் கொள்ளியாச்சு
தேனும் கசப்பாச்சு
மானும் கழுதையாச்சு
அத்தனையும் நீ பிறந்த பிறகாம்
மொத்த ஊரும் இதே பேச்சு

கண்ணால் கதை சொன்ன ரதியே
மெய்யென மயங்கியதென் மதியே
கதியென கொண்டேன் ரதியே
விதியென போனது சதியே

பொன்வண்டின் ஆடையணிந்து
தீண்டியது தேளொன்று
வானவில் வண்ணம் பூசி
தாக்கியது மின்னலொன்று
காகித பூக்களால் மாலையிட்டு
நகைத்தது தேவதையொன்று

வயல்வெளி இழந்தது
தொழுஉர சுவாசம்
உடலுக்குள் ஆயிரம்
நோய்களின் வாசம்

இல்லத்தில் எல்லாமே
இயந்திரமென ஆச்சு
இதயத்தில் ஆடாமல்
மயங்குது உயிர் மூச்சு

கையெட்டும் தூரத்தில் 
வசதிகள் அட்டாச்டு
சுடுகாடும் வந்திடுமோ
வீட்டுக்குள் அட்டாச்டு




No comments:

Post a Comment