Thursday, May 27, 2021

சத்தியம்

வானம் சாட்சி சொல்லாதா 
காத்து சாட்சி சொல்லாதா 
கைகோத்து நடந்தத நெனச்சா 
மனசாட்சி கொல்லாதா!

மாத்தி பேச மாட்டேன்னு 
சத்தியம் போட்டு சொன்னியே 
புத்தி போன பாதையில 
சத்தியம் கெட்டு நின்னியே!

வாக்கிலே மானமென்றால்
பண்பாடு தந்த சாசனம் 
காதலே விளையாட்டென்றால்
வாழ்வில் ஏது விமோசனம் !

No comments:

Post a Comment