Thursday, May 27, 2021

சத்தம்

சிங்கார பொன்னழகே
தாவணி பொன்மணியே
தேன்மொழி வார்த்தையாலே
என் மொழி மறந்தேனே!

மஞ்சள் கொடியழகே
சிவப்பான உதட்டாலே
கருப்பட்டி வார்த்தையாலே
நீலமாச்சு கனவுதானே!

ஊனுக்குள் கரைஞ்சவளே
உசுருக்குள் நெறஞ்சவளே
மடை தாண்டும் வெள்ளம்போலே
தடை மீறுது மோகம்தானே

கண்ணுக்குள் நீதானே
மந்தார பூங்கொடியே
என் தாரமா வந்தாலே
மூவுலகும் தூசுதானே!

No comments:

Post a Comment