சிங்கார பொன்னழகே
தாவணி பொன்மணியே
தேன்மொழி வார்த்தையாலே
என் மொழி மறந்தேனே!
மஞ்சள் கொடியழகே
சிவப்பான உதட்டாலே
கருப்பட்டி வார்த்தையாலே
நீலமாச்சு கனவுதானே!
ஊனுக்குள் கரைஞ்சவளே
உசுருக்குள் நெறஞ்சவளே
மடை தாண்டும் வெள்ளம்போலே
தடை மீறுது மோகம்தானே
கண்ணுக்குள் நீதானே
மந்தார பூங்கொடியே
என் தாரமா வந்தாலே
மூவுலகும் தூசுதானே!
No comments:
Post a Comment