Friday, May 28, 2021

காலதேவன்

 சமூக விலங்கென பிறந்தாய் 

சமூக விலகல் வழக்கமென்கிறாய் 


மண்வளம் கொண்டு உடல் வளம் வளர்த்தாய் 

தன்னலம் கொண்டு பூநிலம் சிதைத்தாய் !


சிந்தையின் வளத்தால் சிகரம் படைத்தாய்  

அறிவியல் போதையால் புவியியல் கெடுத்தாய் !


அமுதம் தந்த பூமிக்கு விஷத்தை ஊட்டினாய் 

அமுதம் உண்ண மட்டும் வாயை திறக்கிறாய் !


முனிவனின்  ஆன்மிகம் சடங்கென பாவித்தாய்  

உயிரின் மோகத்தால் தனிமையில் முனிவனானாய்  


இயற்கையின் சுவாசத்தை செயற்கையால் மூடினாய் 

உன் சுவாசம் காக்க கவசங்களை தேடுகிறாய் !


பயணசீட்டு வாங்கியவனுக்கு வாகனம் சொந்தமல்ல 

பயணசீட்டோடு வந்தவன் நீ உலகம் உனக்கல்ல !


கணனியிலும் போட முடியாது காலதேவன் கணக்கை 

புரிந்து கொண்டால் உன்னை வாழ வைக்கும் இயற்கை !


இயற்கையால் நீ ... இயற்கைக்காக நீ !

No comments:

Post a Comment