சமூக விலங்கென பிறந்தாய்
சமூக விலகல் வழக்கமென்கிறாய்
மண்வளம் கொண்டு உடல் வளம் வளர்த்தாய்
தன்னலம் கொண்டு பூநிலம் சிதைத்தாய் !
சிந்தையின் வளத்தால் சிகரம் படைத்தாய்
அறிவியல் போதையால் புவியியல் கெடுத்தாய் !
அமுதம் தந்த பூமிக்கு விஷத்தை ஊட்டினாய்
அமுதம் உண்ண மட்டும் வாயை திறக்கிறாய் !
முனிவனின் ஆன்மிகம் சடங்கென பாவித்தாய்
உயிரின் மோகத்தால் தனிமையில் முனிவனானாய்
இயற்கையின் சுவாசத்தை செயற்கையால் மூடினாய்
உன் சுவாசம் காக்க கவசங்களை தேடுகிறாய் !
பயணசீட்டு வாங்கியவனுக்கு வாகனம் சொந்தமல்ல
பயணசீட்டோடு வந்தவன் நீ உலகம் உனக்கல்ல !
கணனியிலும் போட முடியாது காலதேவன் கணக்கை
புரிந்து கொண்டால் உன்னை வாழ வைக்கும் இயற்கை !
இயற்கையால் நீ ... இயற்கைக்காக நீ !
No comments:
Post a Comment