Wednesday, May 26, 2021

வழியே

கிளியே கிளியே 
மாஞ்சோலை கிளியே!
தனியே அழைக்குது 
உன் கரு விழியே!
காதல் பயணத்தில் 
காட்டு ஒரு வழியே!
தனியே விட்டு போனால் 
நானும் ஒரு பலியே!

அழகெல்லாம் கோர்த்து 
நடை போடும் சகியே!
வார்த்தைகளை கோர்த்து 
பாட வந்தேன் கவியே! 
பதிலென்ன சொல்வாயோ 
மனதில் சிறு கிலியே!
சரியென்று சொன்னாலே 
கெட்டி மேள ஒலியே!

No comments:

Post a Comment