Sunday, July 4, 2021

ஊசி

காதற்ற ஊசியும் கூட வராது
காதோடு பேசிய காதல் மொழிகள்
கூட வருமோ !!

========================

ஆலமரமாய் என் காதல்
அதில் ஆணிவேர் நீயடி!

=========================

மேகம் விடும்  மழைத்துளிகள்
விண்ணில் நடத்துது பந்தயமே...
தேகம் தொடும் முதல் துளிக்கு 
மண்ணில் கிட்டுது  சாந்தியுமே!

===============================

ஒத்தயடி பாதையில 
ஒத்த கொட புடிச்சுகிட்டு 
ஒரசிகிட்டு நடக்கயில 

ஒன்ன தாண்டி வரும் காத்தும் 
போதையில் தள்ளாடுதடி 

============================

கருத்தரித்து பிறப்பவன் பிள்ளையன்று
பெற்றோர்
கருத்தறிந்து நடப்பவன் பிள்ளை

==================================

நீர் பொங்கும் கடலே 
கைகோர்த்து நடந்த தடங்களை 
அலை வீசி அழித்து விட்டாய் 
மனதோடு பதிந்த தடங்களை 
எதை வீசி அழித்திடுவாய்!!

===================================

சேத்து வயலில் நீ நடந்தா 
முப்போகம் வெளயுமடி 
நேத்து நட்ட சிறு நாத்தும் 
தலைதூக்கி ரசிக்குமடி 

கயல்விழி பார்வையாலே 
கருவாடா போனேனடி
வயல்வெளி தென்றல்கூட 
சுடுங்காத்தா போச்சுதடி 
 
வரப்போரம் போகும்பெண்ணே 
மனசோரம் வருவாயடி 
வரப்போகும் ஆவணியில் 
கழுத்தோரம் தங்கத்தாலியடி

====================================



No comments:

Post a Comment