காதோடு பேசிய காதல் மொழிகள்
கூட வருமோ !!
========================
ஆலமரமாய் என் காதல்
அதில் ஆணிவேர் நீயடி!
=========================
மேகம் விடும் மழைத்துளிகள்
விண்ணில் நடத்துது பந்தயமே...
தேகம் தொடும் முதல் துளிக்கு
மண்ணில் கிட்டுது சாந்தியுமே!
===============================
ஒத்தயடி பாதையில
ஒத்த கொட புடிச்சுகிட்டு
ஒரசிகிட்டு நடக்கயில
ஒன்ன தாண்டி வரும் காத்தும்
போதையில் தள்ளாடுதடி
============================
கருத்தரித்து பிறப்பவன் பிள்ளையன்று
பெற்றோர்
கருத்தறிந்து நடப்பவன் பிள்ளை
==================================
நீர் பொங்கும் கடலே
கைகோர்த்து நடந்த தடங்களை
அலை வீசி அழித்து விட்டாய்
மனதோடு பதிந்த தடங்களை
எதை வீசி அழித்திடுவாய்!!
===================================
சேத்து வயலில் நீ நடந்தா
முப்போகம் வெளயுமடி
நேத்து நட்ட சிறு நாத்தும்
தலைதூக்கி ரசிக்குமடி
கயல்விழி பார்வையாலே
கருவாடா போனேனடி
வயல்வெளி தென்றல்கூட
சுடுங்காத்தா போச்சுதடி
வரப்போரம் போகும்பெண்ணே
மனசோரம் வருவாயடி
வரப்போகும் ஆவணியில்
கழுத்தோரம் தங்கத்தாலியடி
====================================
No comments:
Post a Comment