Sunday, July 18, 2021

மத்தாப்பு

பொற்காசுகளுக்காக 
கவிதை எழுதும்
சில்லரை கவிஞனல்ல நான் ...
பொற்சிலைக்காகவே 
கவிதை எழுதும் 
சித்திரக் கவிஞன் !

====================================

நீ நெருப்புதான்...
என் 
கவிதை மத்தாப்புகளுக்கு !

≈===================================

சிறு வயதில் கற்ற 
பம்பர விளையாட்டை
பருவ வயதில்
என்னிடமே விளையாடுகிறாய் ...
விழிச்சரடை வீசி
சுற்ற வைக்கிறாய்
என் இதயத்தை 
பம்பரமாய் !

====================================

எனது காதல் பஞ்சாங்கத்தில் ... 
உன்னை காணா நாட்கள் 
அமாவாசை!
உன்னோடு பேசா நாட்கள் 
சிவராத்திரி!
நீ இருக்கும் திசை தவிர்த்து
எல்லா திசையும் சூலமே !

====================================

துணிகளை வெளுத்து
என் இதயத்தை 
கறையாக்கி விட்டாயே!

=================================/==

ஆலய வாசலில்
தலைமுடியை 
நேர்ச்சை தருவதாக வேண்டி
தரையில் விழுந்து வணங்கிய
என் காதில் கிசுகிசுத்தது பூமி ...
"நீயே எனக்கு நேர்ந்து விடப்பட்டவன்"

====================================

பட்டி மன்றம் நடத்தி 
பார்த்து விடலாமா ...
என் கவிதை விளைய
சிறந்த காதல் பரப்பு ...
உன் விழியும் 
விழி சார்ந்த இடமுமா?
அல்லது 
உன் உதடும்
உதடு சார்ந்த இடமுமா?

====================================

தீண்டாமையை நான் வெறுக்கிறேன் ...
உன் விழிகளை
தீண்டா மையை !

====================================

நீ காத்திருக்கும்
பேருந்து நிறுத்தத்தின்
நிழற்குடை கூட
கடவுளிடம் விண்ணப்பம் போடுகிறது 
பேருந்து இப்போதைக்கு 
வரக்கூடாதென்று ..  
நான் என்ன சொல்லி 
வேண்டுவது !!?

====================================

தேனிலவிற்கு
எங்கே போகலாம் 
என்று கேட்கிறாயே ...
நான்
உன்னையல்லவா
தேன்நிலவு என்று
நினைத்துக் கொண்டிருக்கிறேன் !!

====================================

உன்னிடம்
மையம் கொண்டிருக்கும்
காதல் அழுத்த
வாழ்வு மண்டலம்
எப்போது வலுப்பெறுமோ ...
எப்போது என்னில் 
காதல் மழை பொழியுமோ ...
இல்லை ...
என்னை கபந்து 
சென்று விடுமோ !

====================================

எந்த டிகிரியில்
உன் பார்வை விழுந்தாலும் 
நூறு டிகிரிக்கு 
எகிறி விடுகிறது
காதல் வெப்பம் !

====================================

No comments:

Post a Comment