கவிதை எழுதும்
சில்லரை கவிஞனல்ல நான் ...
பொற்சிலைக்காகவே
கவிதை எழுதும்
சித்திரக் கவிஞன் !
====================================
நீ நெருப்புதான்...
என்
கவிதை மத்தாப்புகளுக்கு !
≈===================================
சிறு வயதில் கற்ற
பம்பர விளையாட்டை
பருவ வயதில்
என்னிடமே விளையாடுகிறாய் ...
விழிச்சரடை வீசி
சுற்ற வைக்கிறாய்
என் இதயத்தை
பம்பரமாய் !
====================================
எனது காதல் பஞ்சாங்கத்தில் ...
உன்னை காணா நாட்கள்
அமாவாசை!
உன்னோடு பேசா நாட்கள்
சிவராத்திரி!
நீ இருக்கும் திசை தவிர்த்து
எல்லா திசையும் சூலமே !
====================================
துணிகளை வெளுத்து
என் இதயத்தை
கறையாக்கி விட்டாயே!
=================================/==
ஆலய வாசலில்
தலைமுடியை
நேர்ச்சை தருவதாக வேண்டி
தரையில் விழுந்து வணங்கிய
என் காதில் கிசுகிசுத்தது பூமி ...
"நீயே எனக்கு நேர்ந்து விடப்பட்டவன்"
====================================
பட்டி மன்றம் நடத்தி
பார்த்து விடலாமா ...
என் கவிதை விளைய
சிறந்த காதல் பரப்பு ...
உன் விழியும்
விழி சார்ந்த இடமுமா?
அல்லது
உன் உதடும்
உதடு சார்ந்த இடமுமா?
====================================
தீண்டாமையை நான் வெறுக்கிறேன் ...
உன் விழிகளை
தீண்டா மையை !
====================================
நீ காத்திருக்கும்
பேருந்து நிறுத்தத்தின்
நிழற்குடை கூட
கடவுளிடம் விண்ணப்பம் போடுகிறது
பேருந்து இப்போதைக்கு
வரக்கூடாதென்று ..
நான் என்ன சொல்லி
வேண்டுவது !!?
====================================
தேனிலவிற்கு
எங்கே போகலாம்
என்று கேட்கிறாயே ...
நான்
உன்னையல்லவா
தேன்நிலவு என்று
நினைத்துக் கொண்டிருக்கிறேன் !!
====================================
உன்னிடம்
மையம் கொண்டிருக்கும்
காதல் அழுத்த
வாழ்வு மண்டலம்
எப்போது வலுப்பெறுமோ ...
எப்போது என்னில்
காதல் மழை பொழியுமோ ...
இல்லை ...
என்னை கபந்து
சென்று விடுமோ !
====================================
எந்த டிகிரியில்
உன் பார்வை விழுந்தாலும்
நூறு டிகிரிக்கு
எகிறி விடுகிறது
காதல் வெப்பம் !
====================================
No comments:
Post a Comment