Thursday, July 22, 2021

விழி

வழியில் விழி பதித்து நடப்பதா...
இல்லை ... உன்
விழியில் வழி தேடி கிடப்பதா !


நீ பிறந்த பிறகு 
அழகு என்ற சொல்லுக்கு
புதிய அர்த்தம் சேர்த்து
தன்னை
புதுப்பித்து கொண்டிருக்கிறது
அகராதி


நான்
இரண்டு வரி கவிதையை
எழுதி முடிப்பதற்குள்
ஒரு
கவியரங்கத்தையே
நடத்தி விடுகிறதே
உன் கண்கள்!

மணலில் 
கவிதை எழுத முடியுமா ..
உன் காலடி தடங்கள்!


No comments:

Post a Comment