பூலோக தோட்டத்தில் பூத்த
வைரப் பூங்கொடிக்கு
கார்மேக தோட்டத்தில் பூத்த
கண்ணாடி பூக்களால்
அபிஷேகம் !
மண்ணில் விதைத்த
வித்துக்களுக்கு
விண்ணின் பரிசாக
கண்ணாடி முத்துக்கள் !
தெற்கிலிருந்து தென்றல்
கிழக்கிலிருந்து கொண்டல்
மேற்கிலிருந்து மேலை
வடக்கிலிருந்து வாடை
எத்திசையிலிருந்து
எந்த பெயரில் வந்தாலென்ன
அவள் மேனி தழுவி வரும்போது
மட்டும் நீ பூங்காற்று !
தண்ணீர் வரி கேட்காமல்
வாரி இறைக்கிறாய் வான் மழையே ...
எனில்
கண்ணீர் வரும் அளவிற்கா
வாரி இறைப்பது !!
நிலவு தேவதைக்கு
இவ்வளவு அர்ச்சனையா ...
நட்சத்திர பூக்களால் !!
ஆவணி தென்றலும்
கடந்து செல்ல
தயங்குகிறது
தாவணி தென்றலை !
பட்டு புடவை
கட்டிக்கொண்டு
அழகா இருக்கிறேனா
என்கிறாய் ...
எப்படி பொய் சொல்வது
உன்னை விட
பட்டுப்புடவை அழகென்று !
No comments:
Post a Comment