Tuesday, July 27, 2021

வைரப் பூங்கொடிக்கு

 பூலோக தோட்டத்தில் பூத்த  

வைரப் பூங்கொடிக்கு 

கார்மேக தோட்டத்தில் பூத்த 

கண்ணாடி பூக்களால்  

அபிஷேகம் !



மண்ணில் விதைத்த 

வித்துக்களுக்கு 

விண்ணின் பரிசாக 

கண்ணாடி முத்துக்கள் !


தெற்கிலிருந்து தென்றல் 

கிழக்கிலிருந்து கொண்டல் 

மேற்கிலிருந்து மேலை 

வடக்கிலிருந்து வாடை 

எத்திசையிலிருந்து 

எந்த பெயரில் வந்தாலென்ன 

அவள் மேனி தழுவி வரும்போது 

மட்டும் நீ பூங்காற்று !


தண்ணீர் வரி கேட்காமல் 

வாரி இறைக்கிறாய் வான் மழையே ...

எனில் 

கண்ணீர் வரும் அளவிற்கா 

வாரி இறைப்பது !!


நிலவு தேவதைக்கு 

இவ்வளவு அர்ச்சனையா  ...

நட்சத்திர பூக்களால் !! 


ஆவணி தென்றலும் 

கடந்து செல்ல  

தயங்குகிறது 

தாவணி தென்றலை  !


பட்டு புடவை 

கட்டிக்கொண்டு 

அழகா இருக்கிறேனா 

என்கிறாய் ...

எப்படி பொய் சொல்வது 

உன்னை விட 

பட்டுப்புடவை அழகென்று !



No comments:

Post a Comment