மழை
இடி சத்தத்தில் மிரண்டுஅழ ஆரம்பித்து விட்டனவோ
மேக குழந்தைகள்!
அருவி
நதிமகளை காதலித்து
ஏமாற்றியது யாரோ ...
மலை உச்சியிலிருந்து
குதிக்கிறதே !!
பிறந்த உடன்
தற்கொலை எண்ணமா ...
மேகத்திலிருந்து
குதித்தது மழைத்துளி!!
நட்சத்திரங்கள்
இவ்வளவு ஏழையா பூமி ..!!
வானக்கூரையில்
இரவு நேரத்தில்
எவ்வளவு ஓட்டைகள்!
நிலா
விண்மீன் புள்ளிகளை
வைத்துவிட்டு
கோலமிட தெரியாமல்
தவிக்கும் புதுப்பெண்!
எனக்கும் ஆசைதான்
துண்டு சீட்டில்
தத்துவங்களை கிறுக்க ...
என்ன செய்வது ...
என்னை பிறக்க வைத்ததே
என் தாயும் தந்தையும்
கொண்ட காதல் அல்லவா!!
சொல் நயமும் பொருள் நயமும்
தேடி எழுத நான் கம்பனல்ல
உவமை நயம் காட்டி உருக வைக்க
நான் காளிதாசனல்ல
காதல் இலக்கணத்தில்
கவிதையை கற்று விட்டேன்
நீ பிரிந்த கணத்தில்
வாழ்வினையே விற்று விட்டேன்!
உன் பார்வை டோஸ்கள்
காதல் நோயை கூட்டுதடி
இதயம் முழுதும்
காதல் வைரசை கொட்டுதடி !
மழை விழுந்தால்
மண்ணெங்கும் மண் வாசம் - உன் பார்வை விழுந்தால்
மனமெங்கும் பூ வாசம்
என் மன வாய்க்காலில்
வென்னீர் பாய்ச்சும் மங்கையடி ...
என் கவிதை வாய்காலில்
தண்ணீர் பாய்ச்சும் கங்கையடி
என் உயிர் துடிப்பை
உன் விழித்துடிப்பில் காட்டுகிறாய்
உன் இதழ் துடிப்பில்
என் இதயத்தை வாட்டுகிறாய்
மோகமென்னும் திராவகத்தை
ஊற்றுகிறாய் ...
தேகமெங்கும் தீமுகத்தை
ஏற்றுகிறாய்!
காமதேவன் வேடம் பூண்டு
காதல் வலை விரித்தான்
கால தேவன் எனை கொள்ள
பாச வலை விரித்தான்
காதலென்னும் மென்பொருள்
இயங்க மறுக்குதடி
அப்டேட் ஒன்று நீ தந்தால்
வாழ்வே பூட் ஆகுமடி
No comments:
Post a Comment