சீதை காத்திருந்த அசோகவனமெங்கே
தமயந்தி காத்திருந்த சோலையெங்கே
கண்ணகி காத்திருந்த மாளிகையெங்கே
மாதவி காத்திருந்த குடிலெங்கே
சந்திரமதியின் துயரமெங்கே
காய்ந்த சருகிற்கு
கைவருமோ நாட்டியம் ...
கற்று கொடுக்க முயல்கிறதே
களத்துமேட்டு காற்று !
ஓசையின்றி இருந்தாலும்
ஆசையின்றி இருந்திடாதோ
தூரத்து குயிலின் கூவலொன்று
உரசி பார்க்குது ஏக்கங்களை
விருப்பத்தோடு போட்ட விதை
நெருப்பாக முளைக்குதிங்கு
எங்கோ ஒலிக்கும் பாடலொன்று
தூங்கும் உணர்வுகளை எழுப்புதிங்கு
No comments:
Post a Comment