Saturday, July 17, 2021

காய்ந்த சருகிற்கு

 


சீதை காத்திருந்த அசோகவனமெங்கே  

தமயந்தி காத்திருந்த சோலையெங்கே 

கண்ணகி காத்திருந்த மாளிகையெங்கே 

மாதவி காத்திருந்த குடிலெங்கே 

சந்திரமதியின் துயரமெங்கே 


காய்ந்த சருகிற்கு 

கைவருமோ நாட்டியம் ...

கற்று கொடுக்க முயல்கிறதே 

களத்துமேட்டு காற்று ! 



ஓசையின்றி இருந்தாலும் 

ஆசையின்றி இருந்திடாதோ 


தூரத்து குயிலின் கூவலொன்று  

உரசி பார்க்குது  ஏக்கங்களை  


விருப்பத்தோடு போட்ட விதை 

நெருப்பாக முளைக்குதிங்கு  

எங்கோ ஒலிக்கும் பாடலொன்று 

தூங்கும் உணர்வுகளை எழுப்புதிங்கு  


No comments:

Post a Comment