தமிழ் தள்ளி நின்று
என்னை முறைத்தது
விரல்கள் முள்ளாகி
இதயத்தை குத்தியது
காகிதம் தன்னையே
கசக்கி கொண்டது
என்ன நடந்தது ....
ஓ ... இன்று ...
உனக்கான கவிதையை
இன்னும் எழுதவில்லையோ!!
================================
என்
கனவின் முகவரியை கண்டுபிடித்து
கனவில் நுழைந்து அத்துமீறும் நீ
என்
வீட்டின் முகவரியை
எப்போது கண்டு பிடிப்பாய்!!
==================================
நீ
என் இதயத்தில்
மையம் கொண்ட
வலுவிழக்காத
கரை கடக்காத
புயல்!
==================================
பூந்தோட்டத்தில்
ஒரு
நந்தவனம்!!
==================================
என் கனவு வீட்டை
எந்த பூட்டு போட்டு பூட்டினாலும்
அவள் வந்து விடுகிறாள்
மாஸ்டர் கீயோடு!!
==================================
பூக்களின் உலகில்
நான் ராணி என்றது ரோஜா ...
உன் பெயர் எழுதிய
காகிதத்தை காட்டினேன் ...
பாவம் ....
செடியே வாடி விட்டது!!
==================================
No comments:
Post a Comment