Friday, July 30, 2021

காகிதம்

தமிழ் தள்ளி நின்று 
என்னை முறைத்தது

விரல்கள் முள்ளாகி 
இதயத்தை குத்தியது

காகிதம் தன்னையே
கசக்கி கொண்டது

என்ன நடந்தது ....

ஓ  ... இன்று ...
உனக்கான கவிதையை
இன்னும் எழுதவில்லையோ!!

================================

என் 
கனவின் முகவரியை கண்டுபிடித்து 
கனவில் நுழைந்து அத்துமீறும் நீ
என்
வீட்டின் முகவரியை 
எப்போது கண்டு பிடிப்பாய்!!

==================================

நீ
என் இதயத்தில் 
மையம் கொண்ட 
வலுவிழக்காத 
கரை கடக்காத
புயல்!

==================================

பூந்தோட்டத்தில் 
ஒரு
நந்தவனம்!!

==================================
 
என் கனவு வீட்டை
எந்த பூட்டு போட்டு பூட்டினாலும் 
அவள் வந்து விடுகிறாள் 
மாஸ்டர் கீயோடு!!
 
==================================

பூக்களின் உலகில் 
நான் ராணி என்றது ரோஜா ...
உன் பெயர் எழுதிய 
காகிதத்தை காட்டினேன் ...
பாவம் ....
செடியே வாடி விட்டது!!

==================================


No comments:

Post a Comment