முன்பொரு நாள்
நீ உருவாக்கிய
அழகிய தருணங்கள்
இன்று உன்னால்
அழும் தருணங்கள்
உன் கண்வெட்டு
செதுக்கிய
கல்வெட்டு நினைவுகள்
படித்து கிழித்து விட்டாய்
என் இதயத்தை
என் வாழ்வெனும் கதைக்கு
திரைக்கதை எழுதிய இறைவன்
வெறும் பரபரப்பிற்காக
சேர்த்த கதாபாத்திரமோ
நீ
நீ
வரமா இருக்கணும்னுதான்
நெனச்சேன் ...
வராம இருக்கணும்னு
நெனக்கலியே .... !!
மனதில் ஆலகாலத்தோடு
பூமியில் அலையுது
சில ஜீவனே !
ஆலகாலத்தை
கழுத்தில் வைத்திருக்கிறாயா
இல்லை இந்த ஜீவன்களின்
மனதில் இறக்கி விட்டாயா
சிவனே!
லவ்பிஎல்
காதல் கோப்பையாய்
கிடைப்பாய் என்றிருந்தேன்
சியர் கேர்ளாய்
ஆடிவிட்டு போய் விட்டாய்!!
என் காதல் கதையை
எழுதும்போது மர்ம கதை
எழுத்தாளனாகி விட்டான்
இறைவன் ..
கிளைமாக்ஸில்
கதாநாயகியை
வில்லியாக்கி விட்டானே!
No comments:
Post a Comment