Sunday, July 25, 2021

கல்வெட்டு நினைவுகள்

 முன்பொரு நாள் 

நீ உருவாக்கிய 

அழகிய தருணங்கள் 

இன்று உன்னால்  

அழும் தருணங்கள் 


உன் கண்வெட்டு 

செதுக்கிய 

கல்வெட்டு நினைவுகள் 


படித்து கிழித்து விட்டாய் 

என் இதயத்தை 


என் வாழ்வெனும் கதைக்கு 

திரைக்கதை எழுதிய இறைவன் 

வெறும் பரபரப்பிற்காக 

சேர்த்த கதாபாத்திரமோ 

நீ 


நீ

வரமா இருக்கணும்னுதான்

நெனச்சேன் ...

வராம இருக்கணும்னு

நெனக்கலியே .... !!


மனதில் ஆலகாலத்தோடு

பூமியில் அலையுது 

சில ஜீவனே !

ஆலகாலத்தை 

கழுத்தில் வைத்திருக்கிறாயா

இல்லை இந்த ஜீவன்களின்

மனதில் இறக்கி விட்டாயா

சிவனே!


லவ்பிஎல் 

காதல் கோப்பையாய் 

கிடைப்பாய் என்றிருந்தேன் 

சியர் கேர்ளாய் 

ஆடிவிட்டு போய் விட்டாய்!!


என் காதல் கதையை

எழுதும்போது மர்ம கதை

எழுத்தாளனாகி விட்டான்

இறைவன் ..

கிளைமாக்ஸில்

கதாநாயகியை 

வில்லியாக்கி விட்டானே!



No comments:

Post a Comment