Friday, July 16, 2021

தண்ணி

ஓடுகின்ற தண்ணியிலே
ஆடுகின்ற அலையெல்லாம்
வாடுகின்ற என் மனதின் 
தேடுதலை சொல்லிடாதோ!

விண்ணிலாடும் கார்முகிலும் 
மண்ணிலாடும் பூங்கொடியும்  
கண்ணிலாடும் கனவுகளின் 
வண்ணங்களை சொல்லிடாதோ !

ஏற்றமில்லை என்னில் 
தோற்றமில்லை கண்ணில் 
மறந்துபோன கவிதைகளை 
காற்று வந்து சொல்லிடாதோ !




No comments:

Post a Comment