Monday, January 3, 2022

புதுப்பாட்டு

 உன் 

கண் மையை கொடு 

மை போட்டு தேடுகிறேன் 

தொலைந்து போன 

என் இதயத்தை !



பூமரத்தின் மேலமர்ந்து 

கூடு கட்டும் 

புதுப் புறாவே 

பூமரத்தின் கீழமர்ந்து 

புதுப்பாட்டு எழுதட்டுமா !


கொஞ்சும் இதழ் சிரிப்பை 

கொஞ்சமேனும் தாவென 

கெஞ்சுது பூக்கள் !


தின்னக்கனி கிட்டுமோவென 

கன்னக்குழி பார்த்து 

கன்னிப்போயின கிளிகள் !


பாதமலர் படுமிடத்தில் 

கோடிமலர் தூவ 

பூத்திருக்குது மரங்கள் ! 


பூவினமே உனக்காக - என் 

புவனமே காத்திருக்கிறது !

No comments:

Post a Comment