உன்
கண் மையை கொடு
மை போட்டு தேடுகிறேன்
தொலைந்து போன
என் இதயத்தை !
பூமரத்தின் மேலமர்ந்து
கூடு கட்டும்
புதுப் புறாவே
பூமரத்தின் கீழமர்ந்து
புதுப்பாட்டு எழுதட்டுமா !
கொஞ்சும் இதழ் சிரிப்பை
கொஞ்சமேனும் தாவென
கெஞ்சுது பூக்கள் !
தின்னக்கனி கிட்டுமோவென
கன்னக்குழி பார்த்து
கன்னிப்போயின கிளிகள் !
பாதமலர் படுமிடத்தில்
கோடிமலர் தூவ
பூத்திருக்குது மரங்கள் !
பூவினமே உனக்காக - என்
புவனமே காத்திருக்கிறது !
No comments:
Post a Comment