அன்பெனும் ஓலை கொண்டு
பந்தல் அமைத்தேன்
மோகமெனும் தீயில் அது
பற்றியெரியக் கண்டேன்
விழி சிந்திய சொற்களில்
கவிதை கண்டேன் - என்
விழி தீய்ந்து போனபின்னே
எழுத்தில் வடித்தேன்
காலமழை பெய்ததனால்
மலர்ச்செடியாய் முளைத்தேன் - உன்
காதல்மழை பொய்த்ததனால்
கள்ளிச் செடியாய் வளர்ந்தேன்
கூட நெறய பூவ வச்சு
பாத்திருக்க - உன்
கூட பேச ஆச வச்சு
காத்திருக்கேன்
கூட மல்லி வாசம்
ஆள தூக்குதடி
கூட நீயும் துணையிருந்தா
பாலையும் பாற்கடலடி
காதலிப்பதாய்
சொல்லிவிட்டு
காணாமல் போனாள் அவள் ...
டிக்ளேர் பண்ணிவிட்டு
யூஸ் பண்ணாத
வேரியபிள் போல
அனாதையாய் நான்!
No comments:
Post a Comment