சாதா பொங்கல்தான் ...
நீ
வைத்ததால்
சர்க்கரை பொங்கல் !
நீ
ஒரு பொங்கல் பானையை
தேர்ந்தெடுத்த போது
வாடிப்போயின
மீதமுள்ள பானைகள் !
உன்
சேலை ஜரிகையிலுள்ள
பானைகளை
பொறாமையுடன் பார்க்கிறது
நீ
பொங்கல் வைக்கும் பானை !
நீ
சூரியனுக்கு
பொங்கல் வைத்தால்
வாடிப்போகாதா
நிலவும் நட்சத்திரங்களும் !
மஞ்சளும்
பானையும்
வாங்கியபோது
கடைக்காரன் கேட்டான்
கரும்பு வேண்டாமா என்று ..
சொல்லி விட்டேன்
என் வீட்டில்
கரும்புதான்
பொங்கலே வைக்குதுன்னு
No comments:
Post a Comment