மாரை கிழிக்கிறது
மார்கழி கனவுகள்
வீட்டை நிறைக்கும் போட்டியில் ...
கௌரவர்கள் வைக்கோலை நிறைத்தார்கள்
பாண்டவர்கள் தீபமேற்றினார்கள்
நானாக இருந்தால்
உன்னை குடியமர்த்தியிருப்பேன்
நீ
நிரப்பியிருப்பாய் வீட்டை
காதலால் !
நீ
விட்டுப் போன
வழியிலேயே
காத்திருக்கிறேன் ....
என்றாவது ஒரு'நாள்
வழி தவறியாவது
வர மாட்டாயா என !
படிப்பதெதுவும்
மனதில்
பதியவில்லை ...
மனதோடு
நீ
மனப்பாடமாகிப் போனதால் !
மேகத்தை
கலைக்கும் காற்று போல
என் சிந்தனைகளை
கலைத்து போகிறது
உனது நினைவு !
கடலலை அடிக்கிறது
காற்று வீசுகிறது
மழை பெய்கிறது
சூரியன் சுடுகிறது
நிலா குளிர்கிறது
உன் நினைவும் அலைகிறது
சென்ற வருடத்தை போலவே !
மன்னித்துவிடு ....
உன்னை எப்போதும்
மறப்பதில்லையென
என் இதயம்
சபதமெடுத்திருப்பதால்
புது வருடத்தில்
உன்னை நினைப்பேன் என
சபதமெடுக்க முடியவில்லை !
உளறல்களும்
பிடித்து போகிறது
உதிர்ப்பது
உன்
உதடுகள் என்றால் !
சுவாசிக்கும் முன்னே
யோசிக்க
ஆரம்பித்து விடுகிறது
மனது ...
வாசிக்கும் முன்னே
யாசிக்க
ஆரம்பித்து விடுகிறது
இதயம் !
என்
நாட்கள் ஒவ்வொன்றையும்
முத்தாய் கோர்த்து
மணியாரமாய் அணிந்து
ஒய்யாரமாய் நடக்கிறாய் ...
வெறுமையாய்
நடக்கிறேன் நான் !
எண்ணவில்லை
நீ
என் எண்ணமாக மட்டுமே
ஆவாய் என்று !
எங்கோ இருந்து
பனித்துளி
நினைவுகளை தூவி
குளிர வைக்கிறாய் ...
நினைவுகளுக்கு
உருவமில்லை என்று
யார் சொன்னது ...
என் நினைவுகளுக்கு
உருவம் இருக்கிறது
சந்தேகமானால்
கண்ணாடியில் பார் !
மார்கழி மாதத்து
நினைவுகள் ஒவ்வொன்றும்
சித்திரை வெயிலாய்
ஆடிக் காற்றாய்
சிதறடிக்குது என்னை !
மாலை மயங்கும் வேளையிலே
மயிலாடும் சோலையிலே
மங்கை முகம் காணையிலே
மனம் துடிக்குது உவகையிலே !
மார்கழி மாத பூக்களே
வசந்த ராகம் இசைக்கையிலே
தென்றல் தாளம் போடையிலே
மனம் துடிக்குது மோகத்திலே