Friday, December 31, 2021

நீ நிரப்பியிருப்பாய் வீட்டை

 

மாரை கிழிக்கிறது 

மார்கழி கனவுகள் 


வீட்டை நிறைக்கும் போட்டியில் ...

கௌரவர்கள் வைக்கோலை நிறைத்தார்கள் 

பாண்டவர்கள் தீபமேற்றினார்கள் 

நானாக இருந்தால் 

உன்னை குடியமர்த்தியிருப்பேன் 

நீ 

நிரப்பியிருப்பாய் வீட்டை 

காதலால் !


நீ 

விட்டுப் போன 

வழியிலேயே 

காத்திருக்கிறேன் ....

என்றாவது ஒரு'நாள் 

வழி தவறியாவது 

வர மாட்டாயா என !


படிப்பதெதுவும் 

மனதில் 

பதியவில்லை ...

மனதோடு 

நீ 

மனப்பாடமாகிப் போனதால் !


மேகத்தை 

கலைக்கும் காற்று போல 

என் சிந்தனைகளை 

கலைத்து போகிறது 

உனது நினைவு !


கடலலை அடிக்கிறது 

காற்று வீசுகிறது 

மழை பெய்கிறது 

சூரியன் சுடுகிறது 

நிலா குளிர்கிறது 

உன் நினைவும் அலைகிறது 

சென்ற வருடத்தை போலவே !


மன்னித்துவிடு ....

உன்னை எப்போதும்  

மறப்பதில்லையென 

என் இதயம் 

சபதமெடுத்திருப்பதால் 

புது வருடத்தில் 

உன்னை நினைப்பேன் என  

சபதமெடுக்க முடியவில்லை !


உளறல்களும் 

பிடித்து போகிறது 

உதிர்ப்பது 

உன் 

உதடுகள் என்றால் !


சுவாசிக்கும் முன்னே 

யோசிக்க 

ஆரம்பித்து விடுகிறது 

மனது ...


வாசிக்கும் முன்னே 

யாசிக்க 

ஆரம்பித்து விடுகிறது

இதயம் !


என் 

நாட்கள் ஒவ்வொன்றையும் 

முத்தாய் கோர்த்து 

மணியாரமாய் அணிந்து 

ஒய்யாரமாய் நடக்கிறாய் ...

வெறுமையாய் 

நடக்கிறேன் நான் !


எண்ணவில்லை 

நீ 

என் எண்ணமாக மட்டுமே 

ஆவாய் என்று !


எங்கோ இருந்து 

பனித்துளி 

நினைவுகளை தூவி 

குளிர வைக்கிறாய் ...


நினைவுகளுக்கு 

உருவமில்லை என்று 

யார் சொன்னது ...

என் நினைவுகளுக்கு 

உருவம் இருக்கிறது 

சந்தேகமானால் 

கண்ணாடியில் பார் !

 

மார்கழி மாதத்து 

நினைவுகள் ஒவ்வொன்றும் 

சித்திரை வெயிலாய் 

ஆடிக் காற்றாய் 

சிதறடிக்குது என்னை !



மாலை மயங்கும் வேளையிலே

மயிலாடும் சோலையிலே

மங்கை முகம் காணையிலே 

மனம் துடிக்குது உவகையிலே !


மார்கழி மாத பூக்களே 

வசந்த ராகம் இசைக்கையிலே 

தென்றல் தாளம் போடையிலே 

மனம் துடிக்குது மோகத்திலே  



Wednesday, December 29, 2021

நிலாபெண்ணா

 மேகப்பொம்மைகளை 

கலைத்து போட்டு 

விளையாடுவது யார் ...

தென்றல் குழந்தையா ...

நிலாபெண்ணா !


தென்றலும் 

புயலும் 

ஒரே நேரத்தில் !


கட்டெறும்பு 

கடத்தி செல்லும் 

சீனி போல 

கடத்தி செல்ல பார்க்கிறேன் 

உன் 

உதட்டோர 

பனித்துளியை !


https://pbs.twimg.com/media/Ecc-_KZUEAIZVGf?format=jpg&name=large



சொல்லாத வார்த்தைகள் 

உன் விழியில் 

இன்னும் மிச்சமிருக்கு ...

எழுதாத பக்கங்கள் 

என் டயரியிலும் 

இன்னும் மிச்சமிருக்கு !


மனக்கிளையில் 

கூடு கட்டி வைத்திருக்கிறேன் ...



வரப்பு மேல வனப்பு ...

வரம்பு மீறுது நெனப்பு !


உனது 

மாளிகை வாசலில் 

எனது காதல் ...

கோலமா ?

அலங்கோலமா ?


பின்னல் ஜடையை 

பின்னால் தூக்கி போட்டாய் ...

குஞ்சம் வைத்த சவுக்காய் 

வீசிப்போனது நெஞ்சில் !


Tuesday, December 28, 2021

கடலலை

 கடற்கரையில் 

அரசியல்வாதியின் சமாதி ...

இவரைப்போல் 

நாட்டை என்னால் 

அரிக்க முடியாதென 

தோற்று 

பின்வாங்கியது 

கடலலை !


கமிஷன் இன்றி 

தமிழ் நாட்டில் 

கட்டப்பட்ட 

ஒரே பாலம் 

ராமர் பாலம்தான் போலும் !


ஆளை பிடித்தார் 

காண்ட்ராக்ட் எடுத்தார் 

கமிஷன் கொடுத்தார் 

கட்டிங் எடுத்தார் 

ரோடில் எங்கே தார் !?


கோவிலுக்கு வந்தேன் 

உன்னை நினைத்தபடி 

உன்னை சுற்றினேன் 

வெளியே விட்ட 

செருப்பை நினைத்தபடி !


கண்ணனின் புகழ் 

பரவ வேண்டுமென்றால் 

சகுனியும் கூட 

பிறப்பெடுக்க 

வேண்டியிருக்கிறது !


Saturday, December 25, 2021

மாத்திரை

 வீட்டின் 

கன்னி மூலையிலுள்ள 

அறையில் படுத்தால் 

தூக்கம் நன்கு வருமாம் ...


அரசு அலுவகங்களில் 

எல்லா மூலையும் 

கன்னி மூலையோ !



அச்சமில்லை அச்சமில்லை 

அச்சமென்பதில்லையே 

உச்சி மீது வானிடிந்து ...


மனப்பாடம் செய்தான் மாணவன் 

நாளை ஆசிரியர் திட்டுவாரே 

என அஞ்சி !



காதலுக்கு  

கல்லறையை 

பரிசளிக்காதீர்கள் ...

இனிய இல்லறத்தை  

பரிசளியுங்கள் !


காதல் என்ற யாத்திரை

கண் மயக்கும் மாத்திரை

கண் மயக்கும் மா திரை

Friday, December 24, 2021

ஆட்சியெல்லாம் மதுரையிலே

கண்விழிகள் மூடிவைத்தால்

காண்பது உன் கோலம்

கவலையிலே எவ்வளவு நாள்

கழித்திருப்பேன் காலம்


துவளுகிறேன் அடி தளர்ந்து

துடிக்குதடி நெஞ்சம்

தேவி உன் பார்வை பட்டால் 

தொல்லை எல்லாம் அஞ்சும்


அபிநயத்தில் நின்ற இடம்

தென் குமரி எல்லையோ 

அஞ்சேல் என உன் கரங்கள்

அபயம் அளிப்பதில்லையோ 


காட்சியெல்லாம் தருவதற்கே

கடத்துகிறாய் மிக காலம் ...

ஆட்சியெல்லாம் மதுரையிலே 

ஆள்வதுதான் என்ன நியாயம் ...

மாட்சிமையாய் என் மனதை  

ஆள வருவாய் வருங்காலம் !


பூவிழிக்குள் விழுந்த பிம்பம் கோடி - உன்

பொன்உருவம் போல வருமோடி ..

பாவழிக்குள் தடம் பதிப்பவளே 

பதங்களால் பரதம் படிப்பவளே - என் 

நாவழிக்குள் வந்துதிப்பாயோ 

நல்ல தமிழ் நாளும் தாராயோ ...


தீபவிழி காட்டுதடி மாயம் - அதில் 

தீருமோ என் பிறவிக்காயம் 

ஆர்த்தெழும் மோகங்கள் தீராதோ 

அடைக்கலம் உன்னடி போதாதோ 

போதுமடி புவியில் என் வேஷம் - உன் 

கடைக்கண்ணால் அவியாதோ என் தோஷம்!

Tuesday, December 21, 2021

வில்லங்கமானது

 


ஆயிரம் பூக்கள் 

மலர்ந்தென்ன லாபம் ...

ஒரே ஒரு பூவில் 

மனம் செல்வதென்ன மாயம் !


வில் அங்கமான 

அவள் அழகில் 

வில்லங்கமானது மனது !


பூ போன்ற 

உன் நினைவுகள் 

எப்படி என் மனதில் 

கடுமையான தடம் பதிக்கிறது 

ரோடு ரோலர் போல !


உனக்காக 

மரத்தடியில் 

காத்திருந்து காத்திருந்து 

இப்போது 

மரம் கூட என்னை 

காதலிக்க தொடங்கிவிட்டது !


வானளவு 

உயர்ந்து நிற்கிறது 

உன் அழகு ....

ஏட்டளவில் 

அதனை எப்படி 

கிறுக்குவது 

என்று தெரியவில்லை !


இரண்டடியில் 

உலகளந்த பரந்தாமா ...

எப்படி அளப்பாய் 

யசோதையின் 

அன்பை !


இதுவும் கடந்து போகும் 

என்பது பொய்த்து போனது 

கடந்து போக நீ 

காற்று அல்லவே ...

பாதையே நீதானே !


கவிதை சொல்லி 

கழுத்தறுக்கிறேன் என்றாள் ...

நான் என்ன செய்வது 

சொல்லி தந்தது 

உன் விழிகள் தானே !


தொலைந்து போன 

காகிதங்களில் இருக்கிறது 

உனக்கான கவிதை !


உன்னோடு இருந்த நாட்கள் 

மட்டுமல்ல 

உன் நினைவோடு இருக்கும் 

இருக்கும் நாட்களும் 

அழகாகத்தான் 

இருக்கின்றன !


உன்னை தொட்டு 

சென்ற தென்றலை 

சிறை பிடிக்க ஆசை ...

வேறு யாரையும் 

அது 

தொட்டு விடும்முன் !


உன் உடல் தழுவிய 

காஞ்சி பட்டு 

தவித்து நிற்கிறது 

வெட்க பட்டு 


Thursday, December 16, 2021

பைத்தியம் ஆக்கியவள்

 மலரோடு 

ஆரம்பித்தாய் ...

மலர் வளையத்தில் 

முடிப்பாயோ !


பைத்தியம் மாதிரி 

பேசாதே என்றாள் 

பைத்தியம் 

ஆக்கியவள் !


என்னை 

மறக்க வைத்தாய் ...

என்னை 

ஏன் மறந்தாய் !


அதிகமானால் 

அமுதமும் நஞ்சாமே ...

உன்னை 

அளவு கடந்து 

காதலித்துவிட்டேனோ !


மௌனம் என்னும் 

வீணையைதானே 

மீட்டினாய் ...

எப்படி கேட்டது 

எனக்குள் 

காதல் கீதம் !

உன்னைப்போல

 செடியின் 

பூக்களை பறித்து 

கற்சிலைக்கு பூவலங்காரம் ...

செடியில் இல்லையோ 

எங்கும் நிறைந்தவன் !?


என்றோ 

நானெழுதிய கவிதை 

இன்றும் 

இளமையாகத்தான் 

இருக்கிறது 

உன்னைப்போல !


சிந்தும் மழைத்துளி 

சிரிக்குதடி 

அது உன்னோடு 

காதல் கொள்ளுதடி !


உன் புன்னகை தாண்டி 

உவமை சொல்ல 

உலகில் 

ஒன்றும் இல்லயடி !


எந்தன் வரிகள் பொய்யென்றால் 

கற்று தந்த 

உன் கண்களை 

என்ன செய்வாயடி !


Wednesday, December 15, 2021

வரலாறு

மொழியை வென்றவரை
கணிதத்தை வென்றவரை
புவியை வென்றவரை
அறிவியலை வென்றவரை
ஞாபகம் வைத்திருக்கிறது
வரலாறு !

எதுவுமில்லாமல் வந்தாய் 
எல்லாம் வேண்டுமென அலைந்தாய்
எதுவும் நிரந்தரமில்லையென உணர்வாய்
எல்லாவற்றையம் விட்டு ஒரு நாள் பறப்பாய்
எல்லாவர்க்கும் வாழ்க்கை இதுவென அறிவாய்


Friday, December 10, 2021

காளிதாசனே ... கண்ணதாசனே !

 உன்னிடம் 

எல்லாமே 

கவிதையாக தெரிகிறது  ..

என்னிடம் எதுவுமே 

கவிதையாகாமல் 

நழுவுகிறது !


உனக்கு 

விருந்தாக வந்த கவிதை 

எனக்கு 

பசியாகிப் போனது !


உனக்கு 

பூக்களம் போட்ட 

கவிதை 

எனக்கு 

போர்க்களம் 

அமைக்கிறது !


உனக்கு 

தாய்ப்பால் ஊட்டிய கவிதை 

எனக்கு 

கள்ளிப்பால் 

ஊட்ட முனைகிறது !


உன் கவிதை வானில் 

என்றும் பௌர்ணமி ..

என் 

கவிதை வானில்  

என்றும் அமாவாசை !


நினைக்கும் போதெல்லாம் 

கவிதையை பிரசவிக்க 

உன்னால் முடிகிறது ...

என் கவிதைகள் 

கர்பத்திலேயே 

கரைகிறது !


நீ 

எழுதுகோல் பிடித்தால் 

எரிமலை கூட 

பூக்களை தூவுகிறது ...

எனக்கோ 

பூந்தோட்டம் கூட 

தீமழை பொழிகிறது !


காய்ந்த சருகும் 

உன் கவிதையில் 

காதல் சின்னம் ஆனது ...

தாஜ்மகால் கூட 

என் கவிதையில் 

தடுமாறுகிறது !


புயல் காற்றையும்

எழுதுகோலில் 

நிரப்பி விட்டாய் ...

தென்றல் கூட 

என்னிடம் 

தெறித்து ஓடுகிறது !


கவிதைக் கடல் 

உன் 

குவளைக்குள் அடங்கி 

விட்டது ...

குவளை நீர் கூட 

என்னை 

மூழ்கடிக்கிறது !


உன் 

ஒரு வார்த்தையே  

காதலை

குளிர் காய

வைக்கிறது ...

என் நயமான வார்த்தைகளில் கூட

காதல்

கோபத்தில் 

வியர்க்கிறது !


உனது 

காதல் மாளிகையில் 

வார்த்தைகள் 

தென்றலாய் வீசுகிறது ...

எனது 

காதல் குடிசையை 

வார்த்தைகள்

புயலாய் கடக்கிறது !


உனது 

வார்த்தைகளில் கூட 

கவிதையை தேடும் உலகம் 

எனது கவிதையில் 

வார்த்தைகளை 

தேடுகிறது !


உனது 

கவிதை புறா 

தொடு வானில் 

சிறகடிக்கிறது ...

எனது 

கவிதை கழுகு 

தரையில் 

தள்ளாடுகிறது !


அவித்த 

நெல்மணிகள் கூட 

உனது 

புஞ்செய் நிலத்தில் 

கவிதையாய் 

முளைக்கிறது ...

விதை நெல் கூட 

எனது நஞ்செயில் 

கருகிப்போகிறது !


உன் மடியில்

பச்சை குழந்தையாய்

கொஞ்சி விளையாடும்

கவிதை 

எனது முன்னால்

பாசக்கயிறு வீசி

எமனாய் நிற்கிறது!


புரிகிறது 

நீ 

கவிதையை 

வரமாக 

வாங்கி வந்தவன் ...

நானோ 

அதனை 

சாபமாக 

வாங்கி வந்தவன் !






தெரியவில்லை

 விரலசைவு 

விழியசைவு 

ஏன் 

உனது 

முன் நெற்றியில் விழும் 

சிறு கேசம் கூட 

கவிதை சொல்கிறது ...

எனக்குதான் 

என்ன எழுதுவதென்று 

தெரியவில்லை !

காதல் புதிர்

புத்தாடைக்காகவும் 

பட்டாசுக்காகவும் 

இனிப்புகளுக்காகவும் 

எல்லோரும் 

பண்டிகையை எதிர்பார்த்து 

காத்திருக்கையில் 

நான் மட்டும் 

உனக்காக காத்திருக்கிறேன் !


நீ விடுமுறையில்  

ஊருக்கு'சென்ற பின்பு 

ரோஜாக்கள் பூப்பதில்லை

வானில் மேகங்கள் கூட 

கூடுவதில்லை  !


காலம் காட்டிய 

காதல் புதிர் 

உனது 

விழி அசைவில்தான் 

அவிழும் போலிருக்கிறது !


கடந்த காலத்தின் 

ஆதாரம் எதுவென 

நானறியேன் 

மீதமிருக்கும் நாட்களுக்கு 

நீ மட்டுமே ஆதாரமென 

உணர்வு சொல்கிறது !


சில கடன்களை

திருப்பி செலுத்தவே முடியாது 

நீ

என்னிடம் பட்ட

காதல் கடனையும்தான் !


நீ பேசிக்கொண்டே இரு ...

நான் கேட்டுக்கொண்டே 

நடக்கிறேன் ...

உன் ஒற்றை சொல் சிணுங்கல் கூட 

எனக்கு 

காவியமாகவே படுகிறது !

Thursday, December 9, 2021

ஆலகால நினைவுகள்

ஆறாத காயங்களை
ஆழ கீறி 
வழியும் குருதியை 
ஆசை தீர பருகி ... தன் 
ஆயுளை நீட்டித்து
ஆடிக்களிக்கிறது 
உந்தன்
ஆலகால நினைவுகள்...

Wednesday, December 8, 2021

மருந்தாக வருவாயோ ... இல்லை

தோல்வியை நான்

ஒப்புக்கொண்டபின்னும் 

உன் நினைவுகள் 

ஏன் என்னோடு 

யுத்தம் செய்கிறது !


பூந்தோட்டமென்று

காதல் விதைகளை  

நான் விதைத்த நிலம் 

ஏன் 

புதை குழி ஆனது !


என் கவிதைகளின் 

ஒவ்வொரு வரியின் 

நிழலாகவும் மாறி 

ஏன் வதைக்கிறாய் ! 


உனக்காக 

காத்திருந்த விழிகளை   

உறக்கத்திற்காக 

ஏன் 

காத்திருக்க வைத்தாய் !


தொலைத்த இடம் தெரிந்தும் 

தொலைத்த பொருள் தெரிந்தும் 

மீட்கத்தான் முடியாமல் 

ஏன் தவிக்க விட்டாய் !


ஏதேனும் ஓர்நொடி 

என் நினைவு 

வருமாகில் 

தொட்டுப்பார் உன் இதயத்தை ...

துடிப்பது என் நினைவல்லவா !


காலங்கள் கடந்தாலும் 

காதல் காயங்களுக்கு 

காலாவதி ஆகாத மருந்து 

உன் அன்பு மட்டுமே ...

மருந்தாக வருவாயோ ...

இல்லை 

பாலூற்றி போவாயோ !!


Tuesday, December 7, 2021

பிறப்பு

எத்தனை பிறப்போ
அத்தனை பிறப்பும் 
இத்தனை உறவும் 
பக்கத்துணை அருள்வாய்!

Monday, December 6, 2021

சொப்பனதிலேனும் சேர்வாயடி !

 


ஆத்தங்கர ஓரத்துல

அந்தி சாயும் நேரத்துல

காத்து கெடக்குறேண்டி 

கண்சிமிட்ட மறந்தேண்டி!


செங்காத்து வீசுதடி 

செவ்வானம் கருக்குதடி 

ஏங்கும் மனசுக்குள்ள 

எரிமலையும் வெடிக்குதடி !


ஐப்பசி அடை மழையும் 

வெளுத்து கட்டுதடி 

கருகிப் போன ஆசைகளும்

வெள்ளத்தில் கரையுதடி


உசிருக்குள் ஒந்நெனப்பு

ஊசியாய் இறங்குதடி 

உசுரோட உசிர் சேர்க்க  

உள்மனசு ஏங்குதடி !


சூரியனும் சாஞ்சதடி 

திரிவிளக்கும் எரியுதடி 

கண்கள் மயங்கையிலே 

கனவிலேனும் சேர்வாயடி !