Thursday, December 16, 2021

பைத்தியம் ஆக்கியவள்

 மலரோடு 

ஆரம்பித்தாய் ...

மலர் வளையத்தில் 

முடிப்பாயோ !


பைத்தியம் மாதிரி 

பேசாதே என்றாள் 

பைத்தியம் 

ஆக்கியவள் !


என்னை 

மறக்க வைத்தாய் ...

என்னை 

ஏன் மறந்தாய் !


அதிகமானால் 

அமுதமும் நஞ்சாமே ...

உன்னை 

அளவு கடந்து 

காதலித்துவிட்டேனோ !


மௌனம் என்னும் 

வீணையைதானே 

மீட்டினாய் ...

எப்படி கேட்டது 

எனக்குள் 

காதல் கீதம் !

No comments:

Post a Comment