மலரோடு
ஆரம்பித்தாய் ...
மலர் வளையத்தில்
முடிப்பாயோ !
பைத்தியம் மாதிரி
பேசாதே என்றாள்
பைத்தியம்
ஆக்கியவள் !
என்னை
மறக்க வைத்தாய் ...
என்னை
ஏன் மறந்தாய் !
அதிகமானால்
அமுதமும் நஞ்சாமே ...
உன்னை
அளவு கடந்து
காதலித்துவிட்டேனோ !
மௌனம் என்னும்
வீணையைதானே
மீட்டினாய் ...
எப்படி கேட்டது
எனக்குள்
காதல் கீதம் !
No comments:
Post a Comment