செடியின்
பூக்களை பறித்து
கற்சிலைக்கு பூவலங்காரம் ...
செடியில் இல்லையோ
எங்கும் நிறைந்தவன் !?
என்றோ
நானெழுதிய கவிதை
இன்றும்
இளமையாகத்தான்
இருக்கிறது
உன்னைப்போல !
சிந்தும் மழைத்துளி
சிரிக்குதடி
அது உன்னோடு
காதல் கொள்ளுதடி !
உன் புன்னகை தாண்டி
உவமை சொல்ல
உலகில்
ஒன்றும் இல்லயடி !
எந்தன் வரிகள் பொய்யென்றால்
கற்று தந்த
உன் கண்களை
என்ன செய்வாயடி !
No comments:
Post a Comment