Thursday, December 16, 2021

உன்னைப்போல

 செடியின் 

பூக்களை பறித்து 

கற்சிலைக்கு பூவலங்காரம் ...

செடியில் இல்லையோ 

எங்கும் நிறைந்தவன் !?


என்றோ 

நானெழுதிய கவிதை 

இன்றும் 

இளமையாகத்தான் 

இருக்கிறது 

உன்னைப்போல !


சிந்தும் மழைத்துளி 

சிரிக்குதடி 

அது உன்னோடு 

காதல் கொள்ளுதடி !


உன் புன்னகை தாண்டி 

உவமை சொல்ல 

உலகில் 

ஒன்றும் இல்லயடி !


எந்தன் வரிகள் பொய்யென்றால் 

கற்று தந்த 

உன் கண்களை 

என்ன செய்வாயடி !


No comments:

Post a Comment