தோல்வியை நான்
ஒப்புக்கொண்டபின்னும்
உன் நினைவுகள்
ஏன் என்னோடு
யுத்தம் செய்கிறது !
பூந்தோட்டமென்று
காதல் விதைகளை
நான் விதைத்த நிலம்
ஏன்
புதை குழி ஆனது !
என் கவிதைகளின்
ஒவ்வொரு வரியின்
நிழலாகவும் மாறி
ஏன் வதைக்கிறாய் !
உனக்காக
காத்திருந்த விழிகளை
உறக்கத்திற்காக
ஏன்
காத்திருக்க வைத்தாய் !
தொலைத்த இடம் தெரிந்தும்
தொலைத்த பொருள் தெரிந்தும்
மீட்கத்தான் முடியாமல்
ஏன் தவிக்க விட்டாய் !
ஏதேனும் ஓர்நொடி
என் நினைவு
வருமாகில்
தொட்டுப்பார் உன் இதயத்தை ...
துடிப்பது என் நினைவல்லவா !
காலங்கள் கடந்தாலும்
காதல் காயங்களுக்கு
காலாவதி ஆகாத மருந்து
உன் அன்பு மட்டுமே ...
மருந்தாக வருவாயோ ...
இல்லை
பாலூற்றி போவாயோ !!
No comments:
Post a Comment