Wednesday, December 8, 2021

மருந்தாக வருவாயோ ... இல்லை

தோல்வியை நான்

ஒப்புக்கொண்டபின்னும் 

உன் நினைவுகள் 

ஏன் என்னோடு 

யுத்தம் செய்கிறது !


பூந்தோட்டமென்று

காதல் விதைகளை  

நான் விதைத்த நிலம் 

ஏன் 

புதை குழி ஆனது !


என் கவிதைகளின் 

ஒவ்வொரு வரியின் 

நிழலாகவும் மாறி 

ஏன் வதைக்கிறாய் ! 


உனக்காக 

காத்திருந்த விழிகளை   

உறக்கத்திற்காக 

ஏன் 

காத்திருக்க வைத்தாய் !


தொலைத்த இடம் தெரிந்தும் 

தொலைத்த பொருள் தெரிந்தும் 

மீட்கத்தான் முடியாமல் 

ஏன் தவிக்க விட்டாய் !


ஏதேனும் ஓர்நொடி 

என் நினைவு 

வருமாகில் 

தொட்டுப்பார் உன் இதயத்தை ...

துடிப்பது என் நினைவல்லவா !


காலங்கள் கடந்தாலும் 

காதல் காயங்களுக்கு 

காலாவதி ஆகாத மருந்து 

உன் அன்பு மட்டுமே ...

மருந்தாக வருவாயோ ...

இல்லை 

பாலூற்றி போவாயோ !!


No comments:

Post a Comment