Tuesday, December 21, 2021

வில்லங்கமானது

 


ஆயிரம் பூக்கள் 

மலர்ந்தென்ன லாபம் ...

ஒரே ஒரு பூவில் 

மனம் செல்வதென்ன மாயம் !


வில் அங்கமான 

அவள் அழகில் 

வில்லங்கமானது மனது !


பூ போன்ற 

உன் நினைவுகள் 

எப்படி என் மனதில் 

கடுமையான தடம் பதிக்கிறது 

ரோடு ரோலர் போல !


உனக்காக 

மரத்தடியில் 

காத்திருந்து காத்திருந்து 

இப்போது 

மரம் கூட என்னை 

காதலிக்க தொடங்கிவிட்டது !


வானளவு 

உயர்ந்து நிற்கிறது 

உன் அழகு ....

ஏட்டளவில் 

அதனை எப்படி 

கிறுக்குவது 

என்று தெரியவில்லை !


இரண்டடியில் 

உலகளந்த பரந்தாமா ...

எப்படி அளப்பாய் 

யசோதையின் 

அன்பை !


இதுவும் கடந்து போகும் 

என்பது பொய்த்து போனது 

கடந்து போக நீ 

காற்று அல்லவே ...

பாதையே நீதானே !


கவிதை சொல்லி 

கழுத்தறுக்கிறேன் என்றாள் ...

நான் என்ன செய்வது 

சொல்லி தந்தது 

உன் விழிகள் தானே !


தொலைந்து போன 

காகிதங்களில் இருக்கிறது 

உனக்கான கவிதை !


உன்னோடு இருந்த நாட்கள் 

மட்டுமல்ல 

உன் நினைவோடு இருக்கும் 

இருக்கும் நாட்களும் 

அழகாகத்தான் 

இருக்கின்றன !


உன்னை தொட்டு 

சென்ற தென்றலை 

சிறை பிடிக்க ஆசை ...

வேறு யாரையும் 

அது 

தொட்டு விடும்முன் !


உன் உடல் தழுவிய 

காஞ்சி பட்டு 

தவித்து நிற்கிறது 

வெட்க பட்டு 


No comments:

Post a Comment