ஆயிரம் பூக்கள்
மலர்ந்தென்ன லாபம் ...
ஒரே ஒரு பூவில்
மனம் செல்வதென்ன மாயம் !
வில் அங்கமான
அவள் அழகில்
வில்லங்கமானது மனது !
பூ போன்ற
உன் நினைவுகள்
எப்படி என் மனதில்
கடுமையான தடம் பதிக்கிறது
ரோடு ரோலர் போல !
உனக்காக
மரத்தடியில்
காத்திருந்து காத்திருந்து
இப்போது
மரம் கூட என்னை
காதலிக்க தொடங்கிவிட்டது !
வானளவு
உயர்ந்து நிற்கிறது
உன் அழகு ....
ஏட்டளவில்
அதனை எப்படி
கிறுக்குவது
என்று தெரியவில்லை !
இரண்டடியில்
உலகளந்த பரந்தாமா ...
எப்படி அளப்பாய்
யசோதையின்
அன்பை !
இதுவும் கடந்து போகும்
என்பது பொய்த்து போனது
கடந்து போக நீ
காற்று அல்லவே ...
பாதையே நீதானே !
கவிதை சொல்லி
கழுத்தறுக்கிறேன் என்றாள் ...
நான் என்ன செய்வது
சொல்லி தந்தது
உன் விழிகள் தானே !
தொலைந்து போன
காகிதங்களில் இருக்கிறது
உனக்கான கவிதை !
உன்னோடு இருந்த நாட்கள்
மட்டுமல்ல
உன் நினைவோடு இருக்கும்
இருக்கும் நாட்களும்
அழகாகத்தான்
இருக்கின்றன !
உன்னை தொட்டு
சென்ற தென்றலை
சிறை பிடிக்க ஆசை ...
வேறு யாரையும்
அது
தொட்டு விடும்முன் !
உன் உடல் தழுவிய
காஞ்சி பட்டு
தவித்து நிற்கிறது
வெட்க பட்டு
No comments:
Post a Comment