கடற்கரையில்
அரசியல்வாதியின் சமாதி ...
இவரைப்போல்
நாட்டை என்னால்
அரிக்க முடியாதென
தோற்று
பின்வாங்கியது
கடலலை !
கமிஷன் இன்றி
தமிழ் நாட்டில்
கட்டப்பட்ட
ஒரே பாலம்
ராமர் பாலம்தான் போலும் !
ஆளை பிடித்தார்
காண்ட்ராக்ட் எடுத்தார்
கமிஷன் கொடுத்தார்
கட்டிங் எடுத்தார்
ரோடில் எங்கே தார் !?
கோவிலுக்கு வந்தேன்
உன்னை நினைத்தபடி
உன்னை சுற்றினேன்
வெளியே விட்ட
செருப்பை நினைத்தபடி !
கண்ணனின் புகழ்
பரவ வேண்டுமென்றால்
சகுனியும் கூட
பிறப்பெடுக்க
வேண்டியிருக்கிறது !
No comments:
Post a Comment