Tuesday, December 28, 2021

கடலலை

 கடற்கரையில் 

அரசியல்வாதியின் சமாதி ...

இவரைப்போல் 

நாட்டை என்னால் 

அரிக்க முடியாதென 

தோற்று 

பின்வாங்கியது 

கடலலை !


கமிஷன் இன்றி 

தமிழ் நாட்டில் 

கட்டப்பட்ட 

ஒரே பாலம் 

ராமர் பாலம்தான் போலும் !


ஆளை பிடித்தார் 

காண்ட்ராக்ட் எடுத்தார் 

கமிஷன் கொடுத்தார் 

கட்டிங் எடுத்தார் 

ரோடில் எங்கே தார் !?


கோவிலுக்கு வந்தேன் 

உன்னை நினைத்தபடி 

உன்னை சுற்றினேன் 

வெளியே விட்ட 

செருப்பை நினைத்தபடி !


கண்ணனின் புகழ் 

பரவ வேண்டுமென்றால் 

சகுனியும் கூட 

பிறப்பெடுக்க 

வேண்டியிருக்கிறது !


No comments:

Post a Comment