ஆத்தங்கர ஓரத்துல
அந்தி சாயும் நேரத்துல
காத்து கெடக்குறேண்டி
கண்சிமிட்ட மறந்தேண்டி!
செங்காத்து வீசுதடி
செவ்வானம் கருக்குதடி
ஏங்கும் மனசுக்குள்ள
எரிமலையும் வெடிக்குதடி !
ஐப்பசி அடை மழையும்
வெளுத்து கட்டுதடி
கருகிப் போன ஆசைகளும்
வெள்ளத்தில் கரையுதடி
உசிருக்குள் ஒந்நெனப்பு
ஊசியாய் இறங்குதடி
உசுரோட உசிர் சேர்க்க
உள்மனசு ஏங்குதடி !
சூரியனும் சாஞ்சதடி
திரிவிளக்கும் எரியுதடி
கண்கள் மயங்கையிலே
கனவிலேனும் சேர்வாயடி !
No comments:
Post a Comment