Monday, December 6, 2021

சொப்பனதிலேனும் சேர்வாயடி !

 


ஆத்தங்கர ஓரத்துல

அந்தி சாயும் நேரத்துல

காத்து கெடக்குறேண்டி 

கண்சிமிட்ட மறந்தேண்டி!


செங்காத்து வீசுதடி 

செவ்வானம் கருக்குதடி 

ஏங்கும் மனசுக்குள்ள 

எரிமலையும் வெடிக்குதடி !


ஐப்பசி அடை மழையும் 

வெளுத்து கட்டுதடி 

கருகிப் போன ஆசைகளும்

வெள்ளத்தில் கரையுதடி


உசிருக்குள் ஒந்நெனப்பு

ஊசியாய் இறங்குதடி 

உசுரோட உசிர் சேர்க்க  

உள்மனசு ஏங்குதடி !


சூரியனும் சாஞ்சதடி 

திரிவிளக்கும் எரியுதடி 

கண்கள் மயங்கையிலே 

கனவிலேனும் சேர்வாயடி !



No comments:

Post a Comment