மேகப்பொம்மைகளை
கலைத்து போட்டு
விளையாடுவது யார் ...
தென்றல் குழந்தையா ...
நிலாபெண்ணா !
தென்றலும்
புயலும்
ஒரே நேரத்தில் !
கட்டெறும்பு
கடத்தி செல்லும்
சீனி போல
கடத்தி செல்ல பார்க்கிறேன்
உன்
உதட்டோர
பனித்துளியை !
https://pbs.twimg.com/media/Ecc-_KZUEAIZVGf?format=jpg&name=large
சொல்லாத வார்த்தைகள்
உன் விழியில்
இன்னும் மிச்சமிருக்கு ...
எழுதாத பக்கங்கள்
என் டயரியிலும்
இன்னும் மிச்சமிருக்கு !
மனக்கிளையில்
கூடு கட்டி வைத்திருக்கிறேன் ...
வரப்பு மேல வனப்பு ...
வரம்பு மீறுது நெனப்பு !
உனது
மாளிகை வாசலில்
எனது காதல் ...
கோலமா ?
அலங்கோலமா ?
பின்னல் ஜடையை
பின்னால் தூக்கி போட்டாய் ...
குஞ்சம் வைத்த சவுக்காய்
வீசிப்போனது நெஞ்சில் !
No comments:
Post a Comment