புத்தாடைக்காகவும்
பட்டாசுக்காகவும்
இனிப்புகளுக்காகவும்
எல்லோரும்
பண்டிகையை எதிர்பார்த்து
காத்திருக்கையில்
நான் மட்டும்
உனக்காக காத்திருக்கிறேன் !
நீ விடுமுறையில்
ஊருக்கு'சென்ற பின்பு
ரோஜாக்கள் பூப்பதில்லை
வானில் மேகங்கள் கூட
கூடுவதில்லை !
காலம் காட்டிய
காதல் புதிர்
உனது
விழி அசைவில்தான்
அவிழும் போலிருக்கிறது !
கடந்த காலத்தின்
ஆதாரம் எதுவென
நானறியேன்
மீதமிருக்கும் நாட்களுக்கு
நீ மட்டுமே ஆதாரமென
உணர்வு சொல்கிறது !
சில கடன்களை
திருப்பி செலுத்தவே முடியாது
நீ
என்னிடம் பட்ட
காதல் கடனையும்தான் !
நீ பேசிக்கொண்டே இரு ...
நான் கேட்டுக்கொண்டே
நடக்கிறேன் ...
உன் ஒற்றை சொல் சிணுங்கல் கூட
எனக்கு
காவியமாகவே படுகிறது !
No comments:
Post a Comment