பட்டை தீட்டுகிறாய் ...
ஒளியேறிக் கொண்டிருக்கிறது
என் இதயம்
தந்தையின்
காலை கட்டிக் கொண்டு
நானும் வருவேன்
என அடம் பிடிக்கும்
குழந்தை போல ..
உன்னோடு வர
அடம் பிடிக்கிறது
என் இதயம்
ஒற்றை பார்வையில்
கர்ப்பமாக்கி விட்டாய் ...
காதலை பிரசவித்து விட்டு
அனாதையாய் நிற்கிறது
என் இதயம்
மணி முள்ளும் நீ
நிமிட முள்ளும் நீ
நொடி முள்ளும் நீ
கடிகாரமாய் ஓடுகிறது
என் இதயம்
No comments:
Post a Comment