உலக அதிசயங்களில்
சேர்க்கப்படாத
நிரந்தர அதிசயம் நீ !
சேர்க்கப்படாத
நிரந்தர அதிசயம் நீ !
நான் உணவு உண்ண
நீ
பசியை உண்டிருக்கிறாய் !
உனது
இதய கடிகாரத்திற்கு
மட்டுமே தெரியும்
நான்
தூங்கும் நேரமும் ...
விழிக்கும் நேரமும் !
ஆத்தி சூடி
படிக்கும்முன்
அன்பின் சுவடியை
படித்து காட்டினாய் !
நான்
அறிவினை சுமக்க ...
என்னையும்
புத்தகங்களையும்
பள்ளிக்கு
சுமந்தாய் !
ஏதோ ஒரு போட்டியில்
எனக்கு கிடைத்த
நெகிழி கோப்பையை ...
உலக கோப்பையை போல்
மகிழ்ந்து பார்த்தாய் !
தெருக்களில்
நான் பட்ட
விளையாட்டு காயங்கள்
உனது இரவுகளை
காயப்படுத்தியிருக்கின்றன !
தலைவலி வந்தபோது
விக்ஸ்சும் அம்ரிதாஞ்சனும்
தோற்றுப்போய்
சொல்லித்தந்தன
உன் கை விரல்களின்
சக்தியை !
விக்ஸ்சும் அம்ரிதாஞ்சனும்
தோற்றுப்போய்
சொல்லித்தந்தன
உன் கை விரல்களின்
சக்தியை !
எனது மேனியில்
காய்ச்சல் வந்தபோதெல்லாம்
உனது
இதயத்தில்
அனல் அடித்திருக்கிறது !
உனது
முந்தானையின் நுனி
இருந்த தைரியத்தில்
எனது விழி
அச்சப்பட்டதில்லை
அழுவதற்கு !
எனக்கு
முதல் மாச
சம்பளம் கிடைத்தபோது
லாட்டரியில்
கோடி கிடைத்த
சந்தோஷம் உனக்கு !
என்னிடம்
பேசுவதற்காகவே
கைபேசியை
கற்று கொண்டவள் நீ !
எல்லா பிரார்த்தனைகளையும்
பூஜைகளையும்
எனக்கு மட்டுமே
ஒதுக்கியவள் நீ !
உனக்கு பிடித்ததையெல்லாம்
மறந்து போனாய் ...
ஆனால்
எனக்கு
என்ன பிடிக்கும் என
என்னை விட
நன்கு தெரியும்
உனக்கு !
திருவிழா கூட்டத்திலேயே
என்னை தொலைத்ததில்லை
நீ ...
எங்கே தொலைத்தேன்
உன்னை ...
இன்னமும் புரியவில்லை எனக்கு !
நீ
காத்திருந்த திண்ணையில்
தேடி தேடி பார்க்கிறேன்
உனது
அன்பின் வாசத்தை !
என்ற குரல் செவிகளில்
எங்கோ ஒலிக்கிறது ...
வெறுமையாய் பார்க்கிறேன்
இலையை !
நான் அறிவதற்கோ ...
இல்லை அவன் அறிவதற்கோ ...
உன்னை கவர்ந்து போனான்
காலனும் ....!
ஒரு நாள் கூட
இருக்க முடியாதே உன்னால்
என்னோடு பேசாமல் ...
காலனை
சபிக்க வில்லையா நீ !
காத்துக்கொண்டிருக்கிறாய்
எனது கடிதத்தை ...
எனது தொலைபேசி அழைப்பை ...
என்னை ?
போதி மரத்து
பித்தனாய்
நானும் காத்திருக்கிறேன் ...
வந்து சொல்வாயா
எனது துன்பத்துக்கு
காரணத்தை !!!
எனது துன்பத்துக்கு
காரணத்தை !!!
No comments:
Post a Comment