சாவிகளோடு
அனுப்பி விட்டான் ...
திறப்பதற்கு
கதவை காணோம் ...
சுவர் அல்லவா
இருக்கிறது ...
அனுப்பி விட்டான் ...
திறப்பதற்கு
கதவை காணோம் ...
சுவர் அல்லவா
இருக்கிறது ...
பூக்கூடைதான்
வைத்திருக்கிறேன் ...
ஆனால் ...
முட்களைத்தான்
போட்டுவிட்டு
செல்கிறார்கள் ...
வாலறுந்த பட்டம்
கேள்விப்பட்டிருக்கிறேன் ...
இதென்ன
என் பட்டம்
தலை அறுந்து
தள்ளாடுகிறது ...
எனது
நம்பிக்கை படிக்கட்டுகள்
பாசி பிடித்து
வழுக்குகின்றன ...
ஆனந்தமாய்
நீந்த முயன்ற போதுதான்
தெரிந்தது ...
அது
தண்ணீர் கடலல்ல
கண்ணீர் கடல் என்று ..
எதிரில் நிற்பது
எதிர் காலமா ...
எதிரி காலமா ...
ஆன்மா என்னும் புல்லிற்கு
நான்
ஊற்றிக்கொண்டிருப்பது '
பாவ நீரா ...
புண்ணிய நீரா ..
இறுதி ஊர்வலம்
உயிருக்கா ...
உடலுக்கா ...
கட்டணமில்லா பயணம்
என்றுதானே
சொன்னார்கள் ...
ஏன் சோதிக்கிறான்
எனது
பாவ சீட்டையும்
புண்ணிய சீட்டையும் ..
செல்லும் தூரம்
அறியாமல்
ஒரு
ஓட்ட பந்தயம் ...
யாரோ சொன்னார்கள்
பந்தயத்தின் முடிவில்
எல்லோருக்கும் ...
பரிசு நிச்சயமாம்
என்ன பரிசு
என்பது மட்டும் ரகசியமாம் !
பரிசு நிச்சயமாம்
என்ன பரிசு
என்பது மட்டும் ரகசியமாம் !
No comments:
Post a Comment