ஏன்
வரம் தர மறுக்கிறாய் ...
ஒரு வேளை
என் தவத்தை
ரசிக்கிறாயோ !
நீ பூஜை செய்யும்
ராகு காலமே
அம்மனுக்கு பொற்காலம் ...
உன்
தரிசனம் கிடைக்கிறதே
அம்மனுக்கு !
ஏதோ ஒரு
அமைதியான பொழுதில்
உன்னை கண்டேன் ...
அன்றிலிருந்து
எந்த பொழுதுமே
அமைதியாக இல்லை !
உனக்கு பிடிக்காதென்றே
பலவற்றை
கடந்து போகிறேன் நான் ...
பிடிக்கவில்லை என்று
என்னை
கடந்து போனாய் நீ !
No comments:
Post a Comment