உலகின்
ஒவ்வொரு மொழியும்
தவமிருக்கிறது ...
உனது முதல் குரல்
தங்கள் மொழியே
ஆகவேண்டுமென !
ஒவ்வொரு மொழியும்
தவமிருக்கிறது ...
உனது முதல் குரல்
தங்கள் மொழியே
ஆகவேண்டுமென !
இரண்டாம் முறை
நடை பயின்றேன்
உன்னோடு !
உயிரற்ற
பொம்மை கூட
வாங்கி விட்டதே ...
குழந்தையின்
அன்பை !
வார்த்தைகளே இல்லாமல்
ஆறுதல் சொல்லும்
வித்தை
உனது
புன்னகைக்கே உண்டு !
No comments:
Post a Comment