Monday, June 29, 2026

வண்ணத்துப் பூச்சியைத் தேடி

மலர்களின்
வண்ணங்களை
யார்
திருடிச்
சென்றார்கள்
என்று
தேடினேன்...

உன்
சிறகுகளில்
அவை
ஒளிந்திருந்தன!
======================
உனக்கும்
பூக்களுக்கு
அப்படியென்ன
தெய்வீகக்
காதல்?

நீ
தேனை
திருடவில்லையென்று 
பூக்கள்
பொய்
சத்தியமே
செய்கின்றனவே!
=========================
பூக்களின் 
தேனை 
மட்டும் 
திருடுவதாக 
நினைத்துக் 
கொள்கிறாய் ...

எப்போது 
திருப்பி 
கொடுப்பாய் 
எனது 
இதயத்தை !!
========================
காகிதப்
பூக்களில்
செயற்கைத்
தேனை
நிரப்பி
வைத்திருக்கிறோம்...

உனக்கு
அது
பிடிக்காதோ?

========================

நீ

அமர்ந்ததும்

பூக்கள்
மலர்வதில்லை...

பூக்கள்
தங்களை
அழகாகவும் 
உணர்கின்றன!
======================

ரோஜாவும்
மல்லிகையும்
காதலிக்கின்றனவோ...

நீ
காதல்
தூது
சுமக்கிறாயோ?

======================
உன்னை
வரைய
முயன்ற
வானவில்...

ஏழு
நிறங்களே
போதவில்லை
என்று
வெட்கப்பட்டு 
பாதியில் 
கலைகிறது !
======================
ஒவ்வொரு
பூவிடமும்
நீ
விசாரிப்பது...

தேனையா?

அல்லது
அதன்
இதயத்தையா?
======================
நான் 
காகிதங்களில் 
எழுதுகிறேன் ...

நீயோ 
பறக்கும்போது 
காற்றிலேயே 
எழுதி விடுகிறாய் ...

பல 
கவிதைகளை !!
======================
உன்
உதடுகளில் 
மலர்களில் 
மகரந்தத்தை 
கவர்ந்து  
எனக்கு
பரிசளிக்கிறாய்...
கவிதையாக !
======================
பூக்கள்
உனக்காக
காத்திருக்கின்றன...
நான்
உன்னைக்
காத்திருக்கிறேன்
சில 
பூக்களோடு !
======================
பூமிக்கு
நிறங்களை
கற்றுக்
கொடுத்தது
ஓவியன்
அல்ல...
நீதான்!
======================
பிள்ளைகளின்
கைகளில்
பிடிபட்ட
நீ...

சில
நொடிகளில்
அவர்களின்
நினைவாகி
விடுகிறாய்!
======================
உன்
வாழ்நாள்
சிறியது...

ஆனால்
நீ
கடந்து
செல்லும்
ஒவ்வொரு
தோட்டமும்
நீண்ட
நினைவுகளை
சுமக்கிறது!
======================
வண்ணத்துப்
பூச்சிகள்
குறைந்ததால்...

மலர்களே
இப்போது
தங்கள்
அழகை
யாருக்குக்
காட்டுவது
என்று
தெரியாமல்
தவிக்கின்றன!
======================
கள்ளுண்ண
பனைகளை 
வளர்க்க 
வேண்டுமாம் ...

நீ
கள்ளுண்ண
பூந்தோட்டங்களை
ஏன்
மறக்கிறார்கள் !
======================
உன்
சிறகின்
ஒரு
துடிப்பு...

பூமி
இன்னும்
உயிரோடு
இருக்கிறது
என்பதற்கான
கையொப்பம்!
======================
நீ
வராத
வசந்தத்தில்...

பூக்கள்
மலர்கின்றன
ஆனால்
புன்னகைக்கவில்லை!
======================
நூலகம்
முழுவதையும்
வாசித்தும்...

என்
கவிதைகள்
இன்னும்
காகிதத்திலேயே!

நீயோ...

ஒரு
தேன் துளியைச்
சுவைத்துவிட்டு

வானமெங்கும்
கவிதையாகப்
பறக்கிறாய்!
======================
உன்னை
வாகனமாக
ஒரு
கடவுள்
வரித்திருந்தால் ...

உனக்கும்
கிடைத்திருக்கும் 
கோவிலில் 
ஒரு
சிலை!

No comments:

Post a Comment