மல்லிகைப்பூ வாசத்தத்தான்
மனசுக்குள்ள நிரப்பி வச்ச
மழைத் துளிய கன்னத்திலே
முத்தமிட்டு சிதற வச்ச
கல்லு மேல உக்காந்து நானும்
கனவுக்குள்ள மிதக்க வச்ச
கண்ணுக்குள்ள ஓரப் பார்வை
கட்டி போட்டு இழுக்க வச்ச
வெள்ளை நிலா வெளிச்சத்துல
வெட்கம் பூக்க பழக்கி வச்ச
வீதி முழுக்க உன் பேரத்தான்
வீணையாட்டம் இசைக்க வச்ச
ஆத்தோரம் துணி தொவைக்க
போற புள்ள தங்கப் புள்ள
ஏத்தி வச்ச என் ஆசையெல்லாம்
ஏத்துக்கிட்டு வாடி புள்ள!
---
நெல்லு வயல் காற்றத்தான்
நெஞ்சுக்குள்ள வீச வச்ச
நேரம் காலம் மறந்துபோக
நெத்திக்குள்ள பூச வச்ச
தென்னை மர நிழலுக்குள்ள
தேடித் தேடி அலைய வச்ச
தேனடை சிரிப்புலதான்
தேகம் மொத்தம் கரைய வச்ச
சின்ன சின்ன கோபத்தால
சித்திரமாய் வதைக்க வச்ச
சீலை ஓரம் காத்தாட
சிந்தனைய பறக்க வச்ச
கோவில் பாதை நடந்து போற
கொக்கு நடையழகுப் புள்ள!
கூப்பிட்டதும் திரும்பிப் பார்த்தா
கோடி சந்தோசம் கூடும் புள்ள!
---
ஆலமரத்து விழுதைப் போல
ஆசை நெஞ்சில் ஊன்றி வச்ச
ஆத்தங்கரை மணலப் போல
ஆயிரம் கனவ தூவி வச்ச
மீனு துள்ளும் குளத்தோரம்
தெனம் வந்து நிற்க வச்ச
மேக நிழல் போல மனசை
மெத்த மெத்த நனைக்க வச்ச
ஓரப்பார்வை பாத்து போற
பாதி உயிர எடுத்துப் போற
பாவாடை தாவணியில
பருவக் காதல் வெதச்சு போற
காட்டுப் பாதை தனியா போற
கருங்குயிலே மானே புள்ள
கைய பிடிச்சு நடக்கத்தானே
காத்திருக்கேன் வாடி புள்ள!
No comments:
Post a Comment