Monday, June 29, 2026

இயற்கையின் இரகசியம் நீ

ரோஜாவை 
செடியிலிருந்து 
பிரித்து 
பாவம் 
தேடினேன் ..
அதனை 
உன் 
கூந்தலில் 
சேர்த்து 
புண்ணியம் 
நாடினேன் !
==========================
தோட்டத்து 
பூக்களின் 
பிறப்பு 
ரகசியம் 
தேடினேன்  ...
உன் 
கூந்தலை 
காணும் வரை!
==========================
உன்
முகத்தை
ஒருமுறை
கண்டபின்...
நாட்காட்டியில்
பௌர்ணமி
நாளை
நான்
தேடுவதே 
இல்லை!
==========================
தேனீக்களின்
கூட்டை
நான் 
எதற்காக 
தேட வேண்டும் ...
உன்
இதழ்கள்தான்
இருக்கிறதே!
==========================
தென்றலை 
குறித்து 
கவிதைகளை 
எழுதி 
குவித்து வந்தேன் ...
உன் 
மூச்சுக்காற்று 
படும் வரை !!
==========================
நகைக்கடையில் 
முத்துக்களை 
ஏறெடுத்தும் 
நான் 
பார்ப்பதில்லை ..
உன் 
புன்னகையைதான் 
கண்டிருக்கிறேனே  !!
==========================
வண்ணத்து 
பூச்சிகளிடம் 
எனக்கிருந்த 
காதல் 
இடம் மாறிவிட்டது ...
உன்னை 
போச்சம்பள்ளி 
புடவையில் 
கண்ட பின்பு !!
==========================
சந்தனத்தின்  
விளம்பரங்களை 
காணும்போது 
சிரிப்புதான் 
வருகிறது ...
உன் 
ஸ்பரிசம் 
அறிந்த பின்பு !!
==========================
கவிதையைத்
தவிர
வேறெதையும்
பிரசவிக்க
என் பேனா
மறுக்கிறது...
ஒவ்வொரு
நொடியும்
என் மனம்
உன் நினைவுகளை
பிரசவிப்பதால்!
==========================
உனது
நினைவு
மலர்களில்
தேனுண்டு
மயங்கிக்
கிடக்கிறது
எனது
இதயத்தும்பி !

No comments:

Post a Comment