Sunday, June 14, 2026

சக்தி பூக்கடை

பூக்கடை
வாசலில்
நிற்கிறேன்...
பூக்களின்
வாசமா
உன்
வாசமா!?
==================
பூக்களை
முழம் போட்டு
அளக்கிறாய்...
ஆனால்
உன்
அழகை
நான்
எதில்
அளப்பது!?
==================
மல்லிகை
சரங்கள்
தொங்குகின்றன...
உன்
சிரிப்புதானோ 
அவற்றின்
விலைப்பட்டியல்!?
==================
வாடாமல் இருக்க 
பூக்களுக்கு
தண்ணீர்
தெளிக்கிறாய்...
என்
இதயத்திற்கு
எப்போது
காதலை 
தெளிப்பாய் !?
==================
கூடையெங்கும்
பூக்கள்...
ஆனாலும்
என்
பார்வையை 
பறிப்பது
உன் 
கூந்தல் மலரே !
==================
பூக்களை
கட்டுகிறாய்...
அதோடு
என்
மனதையும்
கட்டிவிடுகிறாய்!
==================
மலர்களுக்கு
முள்
இருக்கிறது...
உனக்கு
விழிகள்
இருக்கின்றன!
==================
வாசம்
விற்கும்
கடைதான்...
ஏனோ
என்
மூச்சையே
வாங்கிக்
கொள்கிறது!
==================
பூக்கள் 
வகை வகையாய் 
அழகு !
நீயோ 
எல்லா 
வகை 
பூக்களும் 
சேர்ந்த 
அழகு !
==================
பூக்கள்
காலையில்
மட்டுமே
மலர்கின்றன...
நீயோ
எந்நேரமும்!
==================
கூடையில்
பூக்கள்
குறைந்துகொண்டே
போகின்றன...
என்
காதல்
அதிகரித்துக்
கொண்டே
போகிறது!
==================
பூக்காரி
என்பதாலா ...
என்
மனதிற்குள்
பூந்தோட்டத்தையே 
போடுகிறாய் !?
==================
ஒரு
ரோஜாவிற்கு
விலை
கேட்டேன்...
உன்
புன்னகையை
காட்டிவிட்டாய்!
எங்கே 
போவது !?
அவ்வளவு 
பணத்திற்கு !?
==================
பூக்கள்
வாடினாலும் ...
அவற்றை
விற்ற
உன்
நினைவு
வாடாதே!
==================
விலை 
மதிப்பில்லாதது 
எது ?
உன் 
கைகள் தரும் 
பூக்களா !?
உன் 
கூந்தல் 
மலர்களா !?
==================
நன்றாக 
பார் ...
உன் 
கூந்தலேறிய 
பூக்கள் 
மகிழ்ச்சியிலும் ..
கூடை 
மலர்கள் 
தவிப்பிலும் 
இருப்பதை !!
==================
உன் 
புன்னகை 
மலர்களை 
கண்டபின்னும் 
உன் 
கூடை 
மலர்களை 
விரும்புபவர்கள் 
இருக்கிறார்களா 
இந்நாட்டில் !?
==================
மல்லிகை
வாங்கவந்தேன்...
காதல்
மயக்கத்தை
வாங்கிக்கொண்டு
போகிறேன்!
==================

No comments:

Post a Comment