பறந்தாடும்
வண்ணத்துப்பூச்சி
உன் சேலை
நிறம் தேடும்!
விடியற்காலை
பனித்துளியும்
உன் சிரிப்பை
கடனாய் கேட்கும்!
வரப்போரம்
நீ நடந்த
பாதச்சுவடும்!
மழை நீரில்
கரையாமல்
மனதை கரைக்கும்!
வயல் காக்கும்
சோளக்காட்டு பொம்மை
என் காதலையும்
மௌனமாய் காக்கும்!
No comments:
Post a Comment