கோடாலி கொண்டை போட்டு
கோவிலுக்கு போற புள்ள
கொண்டையிலிருக்கும் கொழுந்திற்கு
கோபுர கலசமென நெனப்புடி
கோவில் சிலையழகா
கோவிலை சுற்றும் நீயழகா
சிலைகளும் தவிக்குதடி
சிற்பியைத்தான் வையுதடி
கல்லான அம்மன் முன்னே
கண் மூடி நீயும் நின்னா
அம்மனும் பிரசாதம் கேட்குமடி !
நானும் உந்தன் பக்தனடி !
No comments:
Post a Comment