வட்ட கொட புடிச்சு
வெட்ட வெளியில் நீ நடந்தா
தரிசும் வயலாகுமடி
வழித்தடமும் தோப்பாகுமடி !
எறிந்து விட்ட பம்பரமாய்
சுத்துதடி எம்மனசு ...
மதி மயக்கமென்னடி
அறிந்தும் தயக்கம் ஏனடி !
எங்கே ஒளித்து வைப்பாய்
பொங்கி நிற்கும் காதலை ..
நிறை குடம் தளும்புமோடி
காதலில் நீ நிறைகுடமடி !
No comments:
Post a Comment