பூவிதழ் உதட்டினிலே
பூகமபம் காட்டிப்புட்ட ...
கண்ண கொஞ்சம் சிமிட்டி
இதயத்த எகிற வச்ச ...
முந்தானை மடிப்பினிலே
என்னையும்தான் மடிச்சுவச்ச ...
காதோரம் லோலாக்கில்
காதல் கத சொல்லி வச்ச ...
சித்திரை மாசத்துல
கருமேகம் பாக்க வச்ச ...
முக்காபங்கு ஆயுசையும்
குத்தகைக்கு எடுத்துப்புட்ட ...
படச்ச பிரம்மன்கிட்ட
என் விதியையே வாங்கிபுட்ட !!
No comments:
Post a Comment