அகநானூற்றில் புரண்டு
கம்பனில் கடன் வாங்கி
இளங்கோவிடம் இரந்து
காளிதாசனில் களவாடி
நினைவுகளை கிளறி
சொற்களை சலித்து
அடித்து அடித்து எழுதி
சுமாராய் ஒரு கவிதை
கிறுக்கி விட்டு நிமிர்ந்தால் ...
வினாடி பார்வையில்
பாவாயிரம் சொல்லி
மின்னலாய் கடந்தாள்
அவள் ..!!!
No comments:
Post a Comment