Sunday, February 7, 2021

வினாடி பார்வையில்

 அகநானூற்றில் புரண்டு 

கம்பனில் கடன் வாங்கி 

இளங்கோவிடம் இரந்து 

காளிதாசனில் களவாடி 

நினைவுகளை கிளறி 

சொற்களை சலித்து 

அடித்து அடித்து எழுதி 

சுமாராய் ஒரு கவிதை 

கிறுக்கி விட்டு நிமிர்ந்தால் ...


வினாடி பார்வையில் 

பாவாயிரம்  சொல்லி 

மின்னலாய் கடந்தாள் 

அவள் ..!!!

No comments:

Post a Comment