Wednesday, February 24, 2021

தென்றல்

அஞ்சன விழிகள் 
பஞ்சணை போடும் 
விழிகளின் அசைவில் 
தென்றலும் வீசும் 

தென்றலின் தாலாட்டில் 
வயலோரம் கதிராடும் 
மங்கையின் மேனியில்
மேலாடை சதிராடும் 

சதிராடும் சிற்றிடையும்  
பூப்போன்ற நடை அளக்கும் 
பெண்ணவள் சிரிப்பிற்கோ 
நெல்மணியும் தாளமிடும் 

விழியோரம் துளிர்ப்பது 
கண்ணீர் துளியோ 
காதலின் வலியோ 

வெண்மேகம் ஒன்று 
அவள் எழில் கண்டு
மயக்கத்தில் ஆனது 
கார்மேகம் என்று  

யார் சொல்லி தந்தார்
மழைக்காலம் என்று 
அவள் கோலம் சொன்னது 
காதல் காலம் என்று 

மையூற்றி எழுதவில்லை 
மையலூற்றி எழுதுகிறேன் 
ஏங்கிடும் நெஞ்சத்தில் 
பொங்கிடும் ஆசைகளை 
விளக்கி வைப்பாயோ.. இல்லை 
விலக்கி வைப்பாயோ!!



No comments:

Post a Comment