வண்ணக் கனவுகளில்
எண்ணங்கள் சிறகடிக்குமே
எண்ணங்களில் சிக்கி
வாழ்க்கைதான் கரைந்திடுமே !
எதை எதையோ சுற்றி
நினைவுகள் சுழன்றிடுமே
நினைவுகளில் சிக்கி
நிஜமும் கசந்திடுமே !
மலர் போன்ற பார்வையில்
மனதில் அனல் பூக்குமே
மடி சாய்க்க நீ இருந்தால்
காயங்கள் ஆறிடுமே !
No comments:
Post a Comment