Tuesday, March 30, 2021
வாங்கி வந்தாயோ
தொலைவேனோ
வளையோசை கலகலக்க
கட்டுகிறாய்..
வளையோசை கலகலக்க
உன்போல் அல்ல
துள்ளுவதெல்லாம்
உன்போல் மானல்ல
மின்னுவதெல்லாம்
உன்போல் பொன்னல்ல
பின்னுவதெல்லாம்
உன்போல் இடையல்ல
அணைப்பதெல்லாம்
உன்போல் கரமல்ல
மீட்டுவதெல்லாம்
உன்போல் விரல்ல
செப்புவதெல்லாம்
உன்போல் நாவல்ல
சிந்துவதெல்லாம்
உன்போல் முத்தல்ல
விம்முவதெல்லாம்
உன்போல் விழியல்ல
எழுதுவதெல்லாம்
உன்போல் கவிதையல்ல
நிரந்தர தலைவி
எனக்கே தெரியாமல்
எப்போது தாக்கல் செய்தாய்
உன் காதல் மனுவை !!
என் ஒவ்வொரு செல்லும்
பிரச்சார நேரம் முடிந்த பின்னும்
ஓயாமல் உனக்காக
பிரச்சாரம் செய்கிறது !!
உள்ளிருப்பு போராட்டம்
நடத்துகிறது
உன் நினைவுகள் !
வாக்குறுதி கேட்டு
விழிகளில் சுற்றுகிறது
சில கனவுகள் !!
நான் நட்ட
கொடிக்கம்பத்தில்
உன் கொடி
எப்படி பறக்கிறது !
Zero hour மட்டுமல்ல
எல்லா hour லும்
உன்னை பற்றிய கேள்விகளே!!
உன் காதல் மசோதா அன்றி
வேறெதையும்
விவாதத்திற்கே எடுக்காமல்
அடம் பிடிக்கிறது மனது !!
உன்னை பற்றி
கனவு காணாமல் இருந்தால்
வெளிநடப்பு செய்வேனென்று
பயமுறுத்துகிறது உறக்கம் !!
காதல் சலிப்பில்
உன்னை செல்லமாய்
திட்டும் வார்த்தைகளை கூட
மூளை தன் குறிப்பிலிருந்து
நீக்க எத்தனிக்கிறது !!
உனது ஸ்லீப்பர் செல்லாய்
எப்போது ஆனது என் இதயம் !!
இலவசமாய் தருவேன் என்று
சொல்லவேயில்லயே ...
உனது இதயத்தை தராமல்
எப்படி பறித்தாய் எனது இதயத்தை!
எல்லா எண்ணங்களும்
உன் முகத்தை காட்டி
இதுவே நமது சின்னம் என்று
மல்லு கட்டுகிறது !!
போதும் உனது காதல் அரசியல் ...
தந்து விடுகிறேன்
எனது காதல் சாம்ராஜ்யத்தை ...
எப்போது வருவாய்
நிரந்தர தலைவியாய் பதவியேற்க !!
பெண் நீதி என்றும் நெருப்படி !!
எல்லையோரம் அரசமரம்
ஏங்கித்தான் காத்திருக்கேன்
மாமனும் வருவானோ
மனச கொஞ்சம் தருவானோ !!
ஒத்த மரத்தடியில்
ஒத்தயில காத்திருக்கேன்
சொக்கனும்தான் வருவானோ
சொக்கிப்போய் நிப்பேனோ !!
நிழலிலே நின்னாலும்
தழலாய் கொதிச்சிருக்கேன்
நீராய் அணைப்பானோ
விரகம் தீர்ப்பானோ !!
இரு விழி மயங்கிடவே
வரும் வழி பாத்திருக்கேன்
நாயகனும் வருவானோ
சோகமதை தீர்ப்பானோ !!
மாலையும் சாயுதடி
மல்லிகையும் வாடுதடி
என் சேதி கேட்க யாருமில்ல
பெண் நீதி என்றும் நெருப்படி !!
கவலையுதிர்காலம்
வேல் முனையும்
உன் விழியும்
ஒன்றல்ல கண்ணே ...
ஆறாத'காயம்
உன்
விழி தந்த பின்னே !
குளிர்காலம் ...
கோடைக்காலம் ...
மழைக்காலம் ...
வசந்த காலம் ...
இலையுதிர்காலம் ...
என
இயற்கைக்கு
காலங்கள் பல படைத்தாய்
ஏழைக்கு
கவலையுதிர்காலம்
என்று படைப்பாய் !!
Sunday, March 28, 2021
கனிமொழி
யாரந்த கவிதை நாயகி !!
ஒரு நாள் ஆயுள் கொண்ட
பூக்களை
குற்றுயிராய் பறித்து
இறைவனுக்கு படைத்து
நீண்ட ஆயுள்
வேண்டினான் மனிதன் !!
உன்னை காதலித்தது கடமை
விலகி போனது கண்ணியம்
உன் நினைவோடு வாழ்வது கட்டுப்பாடு
உன் காதல் உரிமை
சட்டத்தில்
நான் நிராகரிக்க பட்டால்
என்னை நாடு கடத்திவிடு
உன் நினைவுகள் இல்லாத
தேசத்திற்கு !
மனிதன் பிறந்த நாள் கொண்டாட
தன் இறந்த நாளை
கண்டது
மெழுகுவர்த்தி !!
கையோடு கை கோர்த்து
கதைத்தாளில்லை ...
கைபேசியிலும்
கதைத்தாளில்லை ..
கனவோடு
கதைக்கிறாள் ...
யாரந்த கவிதை நாயகி !!
யார் சொன்னது
சிறகின்றி பறக்க முடியாதென்று ..
காதலித்து பார் !!
வெற்றி நடை போடுகிறது
உன்னோடு
கரம் கோர்த்து நடக்கையில்
வெற்றி நடை போடுகிறது
நம் காதலே !!
நீ கவிதை என்றால்
நான்
கவிதையோடு வாழ்பவன் !
என்
கவிதை கப்பல்
கண்ணீர் கடலில்
பயணிக்கிறது !
என் காதலோடு
போராட முடியாமல்
தோற்று போனாள் அவள் ..
இப்போதும்
என்னோடு போராடி கொண்டிருக்கிறது
காதல் !!
Saturday, March 20, 2021
Wednesday, March 17, 2021
காற்றில் உன் வாசம்
எண்ணம்
Monday, March 15, 2021
யாருக்கு சொந்தம்
சேதி என்னவோ
உன்னை காத்து
நாளெல்லாம் உன் நினைவே
வழிமேல் விழியாக
வேதனையுடன் காத்திருக்கேன்
ஏன் வரவில்லை
என் மேல் கோபமா?
உடம்பு சரியில்லையா
ஊரிலேயே இல்லையா?
காத்திருப்பதில் ஆத்திரமில்லை
கடைசியிலேனும் வந்தால் சரி
உன்னை அடைய எத்தனை காத்திருப்பு
என்னென்ன கஷ்டங்கள்
இன்னொருத்தியை
எண்ணிக் கூடப் பாரேன்-நேற்று
மாத்திரம்தானே லீவு-
பாத்திரம் தேய்க்கணும்
இனியும் தாமதியாது வந்துவிடு
முனியம்மா…